2 comments

இசைஞானி இளையராஜா இசையில் இதுவரையில் இசையரசி பி.சுசீலா பாடி வெளிவந்த பாடல் எது?

இந்தக் கேள்வியைப் பொதுவில் கேட்ட பொழுது “கற்பூர முல்லை ஒன்று”, “முத்துமணிமால” என்று ஓரளவு நெருங்கிய விடைகள் கிடைத்தன. ஆனால் அந்தப் பாடல்களுக்குப் பிறகும் ஒரு பாடல் வெளிவந்திருக்கிறது 1993ல்.

இளையராஜாவின் இசையில் முதன்முதலாக பாடல் பதிவு செய்யப்பட்டது பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் குரலில். ஆனால் அந்தப் படம் எடுக்கப்படாமலே மறைந்தது. அந்தப் பாடலையோ அதன் மெட்டையோ வேறெங்கேனும் இளையராஜா பயன்படுத்தியிருக்கின்றாரா என்பது குறித்து தகவல் இல்லை.

அன்னக்கிளி படத்தில் ராஜா இசையில் சுசீலாம்மா பாடிய முதற்பாடல் திரையில் வந்தால், அரண்மனைக்கிளி படத்தில் இந்தப் பாடல் வந்திருக்கிறது. இதைக் கடைசிப் பாடல் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை.

1993ல் ராஜ்கிரண் நடித்து வெளிவந்த படம் அரண்மனைக்கிளி. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள்.

அப்படியிருக்க அந்தப் படத்தில் முதல் பாடலாக வருவதுதான் “நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா”.

ஒரு நாடோடிக் கூட்டம். அதில் ஒருத்தி பருவம் அடைந்திருக்கிறாள். அவளுக்கு அந்தக் கூட்டம் சீர் செய்து பாடும் பாடல்தான் இது.

1993 என்பது இசையரசி பி.சுசீலா பாட வந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகான காலகட்டம். இசைப்புயல் வேகமாக வீசிக் கொண்டிருந்த காலகட்டத்திலும் தன்னுடைய குரல் இன்றளவும் புதுமையானதே என்று மீண்டுமொருமுறை நிரூபித்த பாடல்.

திரும்பத் திரும்பச் சொன்னாலும் சுசீலாம்மாவின் தமிழ் உச்சரிப்புக்கு இன்றும் ஒரு மாற்று இல்லை என்பதே உண்மை. அதைச் சொல்லத் தயங்கவும் தேவையில்லை. ஒவ்வொரு சொல்லும் துல்லியமாக நமது காதில் விழுகிறது.

இந்தப் பாடலோடு நின்று விடாமல் இந்தக் கூட்டணியில் இன்னுமொரு பாட்டு கிடைத்தால் நாம் எல்லாரும் மகிழ்வோம்.

சரி. இப்போது இந்தப் பாட்டை நாமெல்லாம் ரசிப்போம்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

0 comments

இன்னிசைப் பாடகர்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையரசி பி.சுசீலா அவர்களுடன்  இன்னிசைப்பாடகர்கள் இணைந்து பாடிய பிரபல பாடல்கள் வானொலியில் கேட்க மிகவும் இனிமையாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. எனது
இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் எப்போது நிகழ்ச்சி  வழங்கினாலும் வானொலியில் அதிகம் ஒலிபரப்படாத பாடல்களை தான் தேடிப் பிடித்து வழங்குவார் அந்த வகையில் நான் ரசித்த இந்த  ஒலித்தொகுப்பிலும் அறிதான பாடல்கள் வழங்கினார். இதோ உங்கள் செவிக்கும்.

1. சொட்டு சொட்டு சொட்டுன்னு - ஆடவந்த தெய்வம் - டி.ஆர்.மகாலிங்கம்
2. புத்தம் புது மேனி -சுபதினம் - பாலமுரளி கிருஷ்னா
3. முடியாது சொல்ல முடியாது - கண்டசாலா - மஞ்சள் மகிமை
4. ஏ குட்டி என் நேசம்-நாகேஸ்வரராவ் - குடும்பம்
5. காவியமா நெஞ்சில் ஓவியமா -ஜெயராமன் - மஞ்சள் மகிமை
6. காதல் என்றால் ஆணும் - ஏ.எல்.ராகவன் - பாக்யலக்‌ஷ்மி
7. வாம்மா வாம்மா சின்னம்மா - சீர்காழி கோவிந்தராஜன் - தாயில்லா பிள்ளை
8. ஆனந்தஇல்லம் நான் கண்ட உள்ளம் - ஏ.எம்.ராஜா - இது இவர்களின் கதை
9. அனுபவம் புதுமை - பி.பி.ஸ்ரீனிவாஸ் - காதலிக்க நேரமில்லை
10. லவ் லவ் எத்தனை கனவு - டி.எம்.சௌந்தரராஜன் - அதே கண்கள்
11. மாதமோ ஆவணி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - உத்தரவின்றி உள்ளே வா
12. விழியே கதை எழுது - கே.ஜே.யேசுதாஸ் - உரிமைக்குரல்


இசையரசியுடன் இன்னிசைப் பாடகர்கள் ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.


பாசப்பறவைகள் தளத்திற்க்கு நன்றி.