
தமிழ்ல இருக்கு. மலையாளத்துல இருக்கு. வங்காளத்துலயும் இருக்கு. ஆமா. இன்னனக்குப் பாக்கப் போற...அட கேக்கப் போற பாட்டுதான். தமிழ் மலையாளம் புரியுது. மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இங்கயும் அங்கயும் கொஞ்சம் மாத்தி மாத்திப் போட்டிருக்காங்க. அதுனால இருக்கலாம். ஆனா வங்காளம்?
சலீல் சௌத்ரி பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. அவரு ஒரு வங்காள இசையமைப்பாளர். இந்தி மலையாளம்னு நெறையப் படத்துக்கு இசையமைச்சிருக்காரு. மலையாளத்துல ரொம்பப் பிரபலமான கரையினக்கர போனோரே பாட்டு மானச மைனே வரு பாட்டுக்கெல்லாம் இவர்தான் இசை. நல்ல இசையமைப்பாளர்.
செம்மீன் படம் இவரைக் கேரளத்தில் பிரபலப்படுத்தியது. நிறையப் படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. வாணி ஜெயராமை மலையாளத்தில் அறிமுகப் படுத்தியதே இவர்தான். இவர் தமிழ்ல ரெண்டு மூனு படத்துக்கு இசையமைச்சிருக்காரு. குறிப்பிட்டுச் சொல்லப் பட வேண்டிய படம் அழியாத கோலங்கள்.
அந்தப் படத்துல உள்ள காலத்தால் அழியாத காதற்பாட்டுதான் இந்தப் பதிவுல பாக்கப் போறோம். ஆமா. ஜெயச்சந்திரன் கூடச் சேந்து இசையரசி பாடிய "பூவண்ணம் போல மின்னும்" பாட்டுதான் அது. அழகிய இனிய காதற் பாட்டு. கேட்டுப் பாருங்க.
இதே மெட்டை மலையாளத்துலயும் வங்காளத்துலயும் சலீல் சௌத்ரி பயன்படுத்தீருக்காரு. மலையாளத்துல ஏதோ ஒரு ஸ்வப்னம் அப்படீன்னு ஒரு படம் 1977ல வந்தது. அந்தப் படத்துல இதே மெட்டு யேசுதாசைப் பாட வெச்சு எடுத்திருக்காரு. அத இங்க கேளுங்க. மலையாளத்துலதான் இந்த மெட்டை முதல்ல போட்டிருக்கனும். ஏன்னா அழியாத கோலங்கள் 1978ல வந்தது.
அத்தோட விட்டாரா...இந்த மெட்டு மேற்கு வங்காளம் வரைக்கும் போயிருக்கு. அந்தர்காட் அப்படீங்குற படத்துல பயன்படுத்தீருக்காரு. 1980ல வந்த அந்தப் படத்துல கிஷோர்குமாரும் லதா மங்கேஷ்கரும் பாடியத இங்க கேளுங்க.
இப்படி மூன்று மொழியில வந்த பாட்ட சோகமான மெட்டுல இசையரசி குரல்ல கேக்கனுமா? இதோ இங்கே.
மூன்று மொழிகள்ளயும் பாட்டைக் கேட்டீங்க. இப்ப கருத்துகளைக் கொட்டுங்க.
அன்புடன்,
கோ.இராகவன்