Showing posts with label சுசீலா. Show all posts
Showing posts with label சுசீலா. Show all posts
1 comments


அடுத்த ஒரு போட்டிப்பாடல்
கன்னட பாடல் .. மன்ற நண்பர்கள் கோபம் கொள்ளாமல் இருக்க இதோ சிறிய விளக்கம்

படம்: குரு சிஷ்யரு
இசை: கே.வி.மகாதேவன்
குரல்கள் : ஜானகி, இசையரசி


மன்னன் இன்பத்தில் களிப்புற்றிருக்க, நாட்டையும் மக்களையும்
மறந்திருக்க, இன்ப நிலையில் அவனது ஆசை நாயகி பாடுகிறாள்... மன்னா இந்த மெளனம் சரியா என்னிடம் பேசு இந்த பேதை பெண்ணுக்கு இறக்கம் காட்டு இதை பாடுவது ஜானகி


சவாலாக அரசி பாடுகிறாள் . காவலனே மக்களையும் கடமைகளையும் மறப்பது சரியா இது முறையா இதை பாடுவது இசையரசி

பாடல் நல்ல கர்நாடக ராகமான ஹிந்தோளத்தில் அமைந்துள்ளது
ஸ்வர ஜதியுடன் அழகான போட்டி
கேட்டு கண்டு மகிழுங்கள்

1 comments

பாட்டுக்கு பட்டாபிஷேகம்

ஆம் இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக வந்திருந்தாலும் அந்த விருதுக்கு விருதுகிடைத்தது என்றே சொல்லவேண்டும் ஆம் அது இசையிடம் வந்து சேர்ந்துள்ளதே...


இவர் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தகுதியுடையவர். அதையும் சீக்கிரமே கொடுத்து கெளரவிப்பார்கள் என எதிர்ப்பார்ப்போம்.

இந்த உயரிய விருது பெற்ற இந்த நேரத்தில் அவர் ஒவ்வொரு மொழியிலும் பாடிய முத்தான ஒரு பாடலை தரலாம் என நினைத்தேன்.. இசையரசியின் அந்த மொழி ஆளுமையை கண்டு/கேட்டு ரசிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்
1.
தமிழ் மன்றத்தில் பதிவு செய்தால் முதலில் தமிழ் பாடல்
முத்தான பாடல் என்று சொன்னானே .. தமிழில் எல்லாமே முத்தான பாடல்தானே என்று நீங்கள் கூறுவது என் காதில் கேட்கிறது. பாடல்கள் பல இருந்தாலும் சில பாடல்கள் ஏதோ சில காரணங்களலால் சில பாடல்கள் நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் அப்படி ஒரு பாடல் தான் இது

ஆம் " ஒரு நாள் இரவில் கண்ணுறக்கம் பிடிக்கவில்லை" என்று பணத்தோட்டம் திரையில் அபிநய சரஸ்வதிக்கு இசையரசி பாடிய அருமையான பாடல் ..

படம்: பணத்தோட்டம்
இசை: மெல்லிசை மன்னர்கள்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்

இவர் பாடும் விதம் கேளுங்கள் .. தமிழ் இனிது அதை சுசீலாம்மாவின் குரலில் கேட்பது அதைவிட இனிது. கண்ணதாசனின் வரிகளும், மெல்லிசை மன்னர்களின் இசையும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலாக்கியது என்பது 100/100 உண்மை

இதோ பாடலை கண்டு கேட்டு மகிழுங்கள்

oru naal

2.
தமிழ் பாடலை தொடர்ந்து சுந்தர தெலுங்குப் பாடல்


தெலுங்கில் சுசீலா பாடல்கள் தமிழைவிடவும் கூடுதல் ஆதலால் எதை கொடுப்பது என்று யோசித்த வேளையில் அவருக்கு தேசிய விருது பெற்று தந்த "ஆகுலோ ஆகுனை" என்ற* பாடல் தான் நினைவிற்கு
வந்தது. தாசரி நாராயணராவ் இயக்கி நாகேஸ்வரராவ், ஜெயசுதா, ஜெயப்பிரதா நடித்து திரு ரமேஷ் நாயுடு இசையமைத்த படம். யேசுதாஸும் சுசீலாவும் மட்டுமே பாடியிருப்பார்கள். சுசீலாவிற்கும் விருது, யேசுதாஸுக்கும் விருது கிடைத்தது. அத்தனை பாடல்களும் பொக்கிஷங்கள். இன்றும் தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமான பாடலிது. தேவுலபள்ளி கிருஷ்ணா சாஸ்த்ரியின் வரிகளை பாராட்டாமல் இருக்க முடியாது

படம்: மேகசந்தேசம்
இசை: ரமேஷ் நாயுடு

இதோ பாடலை கண்டு கேட்டு மகிழுங்கள்





3.கடவுளின் சொந்த பூமிக்கு வருவோம் ஆம் மலையாளம் ..

மலையாள உலகிற்கு சுசீலாவை அறிமுகம் செய்தவர்
தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஆனாலும் மலையாள உலகிற்கு சுசீலாவின் குரலில் பல அற்புத காணங்களை உருவாக்கியவர் மலையாள இசையுலகின் தேவகான ராஜா திரு தேவராஜன் மாஸ்டர் அவர்கள். தேவராஜன் வயலார் சுசீலா கூட்டணி மலையாளிகளலால் என்றுமே மறக்க முடியாத கூட்டணி.

இந்த கூட்டணியின் ஒரு சிறந்த பாடல் இதோ

படம்: நதி
இசை: தேவராஜன்
வரிகள்: வயலார் ராமவர்மா





4.கன்னடம் இதிலும் சுசீலாம்மா எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார்

மிகவும் பிரபலாமான அமுதை பொழியும் நிலவே பாடலை கன்னடத்திலும் சுசீலாம்மா பாட அந்த பாடல் காலத்தால் அழியா பாடலானது

இதோ அந்த பாடல்

4 comments



இன்று இசையரசியின் பிறந்த நாள் ..

இசையின் பிறந்த நாள் ..

இசையரசி எல்லா வளத்துடனும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.



Let's wish our Melody Queen a Very HAPPY BIRTHDAY
பிறந்த நாள் பரிசாக இரண்டு சிறப்பு பாடல்கள்
2 special songs

1. பாமகரிசா (Pamagaresa )

ஒந்தே ரூபா இரடு குணா (ondhe rupa iradu guna)

சலீல் செளத்ரி (salil chowdry)

ஆர்.என். ஜெயகோபால் (R.N.Jayagopal)



பாலுவும் சுசீலாவும் பாடும் அழகை என்னவென்று சொல்வது

2. மனசு மனசின்டே காதில் (manasu manasinte kaadhil)
சோட்டானிக்கர அம்மா ( chottani kara amma)
ஆர்.சேகர் (R.Shekar)

ராத்திரி என்றால் இவ்வளவு இதமாகத்தான் இருக்க வேண்டும்
மதுரக்குரலோன் யேசுதாஸும்,சுசீலாவும் பாடும் அழகை சொல்ல வார்த்தைகளே போதாது.

2 comments

நாட்டுப்புற வரிசை − 3

தேன் கூடு நல்ல தேன் கூடு − தூக்கனாங்குருவிக்கூடு


நாட்டுப்புற பாடல்கள் தான் எத்தனை வகை ஏறு பிடிக்க பாட்டு, நாத்து நட பாட்டு, தாலாட்ட பாட்டு என பல வகை அதில் இந்த பாடல் ஒரு வகை

இது ஒரு துள்ளல் வகையான நாட்டுப்புற பாடல்

கவிஞரின் சொந்த தயாரிப்பான வானம்பாடி
மாமாவின் இசையில் எல்லா பாடல்களுமே அற்புத பாடல்கள்
ஆம் ஆண்கவியை வெல்ல வந்த என்ற போட்டி பாடலாகட்டும்,
மனதை உருக்கும் கங்கைக்கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
நெஞ்சை நெகிழ வைக்கும் கடவுள் ஏன் கல்லானான்
ஏட்டில் எழுதி வைத்தேன் என எல்லாமே காலத்தால் அழியா கானங்கள்
இந்த பாடல்களோடு துள்ளிசையாக அமைந்த நாட்டுப்புற பாடல், தான்
தூக்கனாங்குருவிக்கூடு என்ற பாடல்

சும்மா வெளுத்து வாங்கியிருப்பாங்க சுசீலாம்மா
கவிஞர் மட்டும் என்ன குறைச்சலா .. ஆனானப்பட்டா ராஜா கூட மயங்கனும் கேட்டு ..மயங்கமாட்டாரா என்ன?

தூக்கணாங்குருவிக் கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நெனப்பு மனசிலே

பாக்கிறான் பூ முகத்தைப்
பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நெனப்பு தெரியலே

(தூக்கணாங்)

அம்மான் வீட்டுப் பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளிக் கொடுக்க வேண்டாமா
கம்மான் கையில் பொன்னை வாங்கிக்
கட்டிக் கொள்ள வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப் போட்டு
காத்துக் கிடக்க வேண்டாமா

(தூக்கணாங்)

கூரைக் குடிசை நடுவிலே
அந்தப் படுக்கையப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சு
கோலத்தப் போட்டு
ஆற அமர மச்சானோடு
படிக்கணும் பாட்டு
ஆனானப்பட்ட ராஜா கூட
மயங்கணும் கேட்டு...
அத விட்டு...

(தூக்கணாங்)


6 comments

நாட்டுப்புற பாட்டு இது நாடறியாத பாட்டு

முன்பு சுசீலா நாட்டுப்புற பாடல்கள் குறைவாக பாடியிருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது அது உண்மையல்ல

அதற்கு உதாரணம் எத்தனையோ பாடல்கள்
50'களில் சித்தாட கட்டிக்கிட்டு தொடங்கி 90'களில் வந்த பாடல்கள் வரை

93' ல் வெளிவந்த அரண்மனைக்கிளி படத்தில் ராஜாவின் ராஜாங்க இசையை யாரும் மறந்திருக்க முடியாது
ஆம் ஜானகியின் வான்மதியே ஓ வான்மதியே
மனோ−மின்மிணியின் அடி பூங்குயிலே பூங்குயிலே பாடல்களுக்கு மத்தியில்
இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை ஆனாலும் இது ஒரு அழகான நாட்டுப்புற பாடல் சடங்கு பற்றி அழகாக பிறைசூடன் எழுத ராஜா சுசீலாவை அழைத்தார் இதை பாட. எந்த பாடல் என்று ஞாபகம் வருகிறதா .. ஆம் " நட்டுவெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா " என்ற அழகான மெட்டுடைய பாடல் அது ..

சுசீலாவின் குரலை கேளுங்கள் என்ன இனிமை என்ன தெளிவு .
குறைந்த வாத்தியங்கள் பயன்படுத்தியிருப்பார் ராஜா காரணம் சுசீலாவின் குரலே பல ஜாலங்களை செய்யுமே.
"மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்" சுசீலா குழைவார்

இதோ பாடல் வரிகள்

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா

மானுக்கு மேலழகு
மயிலுக்குத்தான் வாலழகு
பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்
மொத்தமா அழகிருக்கு தனித்தனியா சொல்லனுமா
அம்மம்மா பேரழக பிரிக்கனுமா
பொத்தித்தான் வைச்சாலும் வந்திடும் பூவாசம்
பொண்ணு தான் ஆளானா நிச்சயம் கல்யாணம்
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா

வான வளைச்சு அந்த வானவில்லை போட்டது போல்
நம்ம வளைச்சு ஒன்னா சேர்த்துப்புட்டா
பூமி செழிச்சதுன்னா பொன்ன அள்ளி கொடுப்பதுபோல்
பொன்னப்போல் சிரிச்சு அவ பார்த்துப்புட்டா
என்னம்மா ஆராய்ச்சி பொன்னு இப்ப பூவாச்சு
அம்மன் கோவில் தேராச்சு ஆடி வரும் நாளாச்சு
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா

பாடலை கேட்டு மகிழுங்கள்