
பழைய நடிகை விஜயகுமாரியை யாரும் மறந்திருக்க முடியாது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்ததை இன்றைக்கும் கே.டிவி நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறதே. அவருக்காக இசையரசி நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றாலும் இந்த ஒரு பாடல் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது.
கருநிறமென்பது அழகன்று என்று ஒரு மூடநம்பிக்கை இன்றும் உலகெங்கும் இருப்பதை நாம் அறிவோம். அது ஒரு பெண்ணானால்? அந்த நிறத்திற்காகவே அவள் பழிக்கப்பட்டாள்? இழிக்கப்பட்டாள்? அந்த வேதனனயை என்ன சொல்வாள்?
கருப்பாக இருக்கும் ஆண்டவன் வேண்டும். பெண் வேண்டாமா? அதுதான் அவள் கேட்கும் கேள்வி? அதற்கு விடை இன்றும் நம்மிடையே இல்லை.
நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்திற்காக சுதர்சனம் இசையில் கவியரசர் கண்ணதாசனின் பாடல் நமக்காக இசையரசி பி.சுசீலா அவர்கள் குரலில் கிடைக்கிறது. கேளுங்கள்.
இந்தப் பாடலையும் தந்து அதை விருப்பமாகவும் வெளியிட்ட நண்பர் கூமுட்டை அவர்களுக்கு நன்றி பல.
அன்புடன்,
கோ.இராகவன்