Saturday, 22 November 2008

நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு

நீண்ட நாட்களாக இசையரசி பதிவு வெறுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு இனிய பாடலுடன் இந்த இடைவெளியை நிரப்புகின்றேன். இந்தப் பதிவு இசையரசி பி.சுசீலாவுடன் எஸ்.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ஒரு ஜோடிப் பாடல்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லி விடலாம், பாடல்கள் சிறப்பாக, இனிமையாக இருக்கும் என்று. ஆர்.சுந்தரராஜன் இளையராஜாவோடு கூட்டணி சேரும் போது மட்டுமல்ல, தேவாவோடு "என் ஆசை மச்சான்" போன்ற படங்களில் இணைந்தபோதும், "அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை" திரைப்படத்தில் கே.வி.மகாதேவனோடு இணைந்தபோதும் கூட அந்தச் சிறப்பு இருந்தது.

சரணாலயம் திரைப்படம் ஆர்.சுந்தராஜன், எம்.எஸ்விஸ்வநாதனோடு இணைந்து பணியாற்றிய வந்த அருமையான பாடல்களோடு வந்த படமாகும். குறிப்பாக நான் இங்கு தரும் "நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு" பாடலைக் கேளுங்கள், உண்மை புரியும். எம்.எஸ்.வி எண்பதுகளிலும் சோர்ந்து விடவில்லை என்பதற்கு இப்படியான பாடல்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

Nedunaal aasai - SPB P.Suseelaa

Tuesday, 9 September 2008

கதாநாயகி வரிசை: ஒய்.விஜயா

இவரை வில்லியாகத்தான் நிறையப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அல்லது சிங்காரிச் சரக்கு மாதிரி பாடல்களில் கவர்ச்சியாகத்தான் பார்த்திருப்பீர்கள். ஆம். நடிகை ஒய்.விஜயாவைத்தான் சொல்கிறேன்.




சில நடிகைகள் வில்லிகளாகவே வாழ்ந்து விடுகிறார்கள். சி.கே.சரஸ்வதிக்குப் பிறகு ஒய்.விஜயாவிற்கு அந்த வாய்ப்பு. ஆனாலும் இவருக்கும் ஒரு இனிய பாடலும் பாத்திரமும் ஒரு சில படங்களில் கிடைத்திருக்கின்றன.

அப்படியொரு படமே "அவர் எனக்கே சொந்தம்". ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் பெரிய பாத்திரங்கள் ஏற்று நடித்த படத்தில் கைம்பெண் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஒய்.விஜயா. ஒரு குழந்தைக்குத் தாய்ப் பாத்திரத்தில் நடித்த அவருக்கு இளையராஜாவின் இசையில் ஒரு இனிய பாடலும் கூட உண்டு. ஆம். இசையரசியின் அமுதக் குரலில் "தேனில் ஆடும் ரோஜா" என்று பாடிக் குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறார். இந்த இனிய பாடலைக் கண்டும் கேட்டும் ரசியுங்கள்.



சென்னையில் இந்தப் படத்தில் ஒளித்தகடு கிடைத்ததும் வாங்கி விட்டேன். பாடல்கள் அனைத்தையும் வலையேற்றியும் விட்டேன். இந்தப் படத்தில் தொலினேனு ஜேயு என்ற தியாகராஜர் கீர்த்தனையையும் கபிகபி மேரே தில் மே என்ற பாடலையும் டி.எம்.சௌந்தரராஜனை நகைச்சுவை நையாண்டியோடு பாட வைத்திருக்கிறார் இளையராஜா. அதற்கு நடித்திருப்பவர் வி.கே.ராமசாமி. பாட்டைக் கேளுங்கள். இலவசமாக அந்தப் பாடலையும் இங்கேயே தருகிறேன்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Wednesday, 20 August 2008

இசையரசியும் தாலாட்டும் - பாகம் 2

இசையரசியும் தாலாட்டும் - பாகம் 2

தாலாட்டு என்ன குழந்தைக்கு மட்டும் சொந்தமா
இல்லை என்கிறார் ஒரு கணவர். ஆம் ஆதர்ஸ மனைவி கணவனுக்காக பாடும் தாலாட்டாக ஒரு பாடல். எந்த பாடல் என்று யூகிக்கமுடிகிறதா ம்ம்ம்

"நீ மதி சல்லகா சுவாமி நிதுரபோ" என்ற தெலுங்குப்பாடல் அது

பிரபல ஹிந்திப்பாடலான கில்தேஹை குல் யஹான் மெட்டை தமிழிலும் தெலுங்கிலும் பாடியவர் இசையரசி

தமிழில் ராதையின் நெஞ்சமே , தெலுங்கில் நீ மதி சல்லகா. ஹிந்தியில் லதா காட்டிய அதே இனிமையை இசையரசி தமிழிலும் தெலுங்கிலும் மேலும் ஒரு படி கூடியாவறு பாடியிருப்பார்

அன்பான மனைவி ஜமுனா தன் கணவர் என்.டி.ஆரை தூங்கச்செய்யும் பாடல் இது

கண்டு மகிழுங்கள்





தாய் தாலாட்டு பாடுவது இயல்பு. கல்யாணமாகாத பெண் தாலாட்டு பாடுவதென்றால் எப்படி. அப்படி ஒரு சூழல்தான் இங்கே ஒரு பெண்ணுக்கு. கல்யாணம் ஆகவில்லை ஆனால் தன் காதலனின் பிள்ளை என்று சொல்லிக்கொண்டு ஒரு பையன் வந்து நிற்க தன் காதலனின் மீது கொண்ட நம்பிக்கையால் அவனுக்கு உதவ அப்படித்தான் அந்த பையனை தன் வீட்டிற்கு தன் காதலன் கொண்டுவந்து விட அவனது சுட்டித்தனத்தை சமாளித்து அவனை தூங்கச்செய்கிறாள் இந்த பெண். அப்படி ஒரு குறும்பான தாலாட்டு தான் " தந்தை யாரோ தாயும் யாரோ " என்ற யார் பையன் திரைப்படப்பாடல். சாவித்திரியும் டெய்ஸி ராணியும் அழகாக நடித்திருப்பர். இசையரசி குறும்பு குறையாமல் பாடியிருப்பார் அதுவும் "தூங்குடா"என்று சொல்லும் அந்த செல்ல்க்கோபம் அழகோ அழகு.

படம்: யார் பையன்
இசை: சலபதிராவ்
வரிகள் : மருதகாசி

http://psusheela.org/audio/ra/tamil/...aresong023.ram


தாய்மை உணர்வு அற்புதமானது. ஒவ்வொரு தாயும் எந்த சூழலிலும் தன் பிள்ளைகளின் நலனைப்பற்றியே
சிந்திப்பாள். இங்கும் அப்படித்தான் ஒரு தாய் இருக்கிறாள். ஆம் மன நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போதும் அவள் நினைவெல்லாம் தன் பிள்ளையை சுற்றியே அவனுக்கு தாலாட்டு பாடுவதாக இங்கே அழகான தாலாட்டை பாடுகிறாள். இசையரசியின் குரலில் பாடலை கண்டு மகிழுங்கள்

" முத்துலா மா பாபு"
ஜீவன ஜோதி என்னும் திரையில் ஒலிக்கும் பாடல் இது. வாணிஸ்ரீ பிரமாதமாக நடித்த படம் இது.



மலையாள திரையில் எத்தனையோ இனிமையான தாலாட்டுப்பாடல்கள் உள்ளன அவற்றில் இதுவும் முக்கிய ஒன்றாகும்.
சலீல் செளத்ரியின் இசையில், வயலாரின் வரிகளை இசைக்கிறார் இசைக்குயில் ராகம் திரைப்படத்திற்காக.

இவர்கள் மூவரும் சேர்ந்து பாடலை இனிமையாக்குகிறார்கள் என்றால் அளவான அழகான நடிப்பார் ஊர்வசி சாரதா திரையில் மெருகேற்றுகிறார்.

" ஓமன திங்கள் பக்ஷி " என்ற பாடல் தான் அது. இந்த இனிமையன மெட்டுக்கு எந்த மனமும் கண்மூடத்தானே செய்யும்

http://www.youtube.com/watch?v=33x_pOHxdzk

Friday, 8 August 2008

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்



மணிமண்டபம் படத்தில் சுசீலாம்மாவின் கொஞ்சும் குரலில் ஓர் பழைய்ய்ய்ய்ய்ய்ய இனிமையான அற்புதமான வரிகளில் இந்த பாடல் ரொம்ப நாள் கழித்து எனக்கு கிடைத்தது நானும் ரொம்ப நாள் கழித்து இந்த தளத்தில் பதிகின்றேன் இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுங்கள்.

படம்: மணிமண்டபம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: ஸ்வரப்ரம்மா கே.வி.மஹாதேவன்

போட்டோ உதவி : நன்றி, இண்டியாக்ளிட்ஸ்.காம்

Get this widget | Track details | eSnips Social DNA



உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
ஹ ஹ ஹ் ஹஹஹஹ

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

பகலும் வரும் உடனே இரவு வரும்
பகலும் வரும் உடனே இரவு வரும்

பழக வரும் துணையும் விலகி விடும்
பழக வரும் துணையும் விலகி விடும்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்

தாழ்வதோ சிலநாள் மனம் வாடுவதே பலநாள்
தாழ்வதோ சிலநாள் மனம் வாழடுவதே பலநாள்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

சென்றதெல்லாம் வருமோ அதை சிந்தனை தான் தருமோ
வந்ததை யார் தடுப்பார் இனி வருவதை யார் மறுப்பார்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

இமைகளை மூடிடுவோம் ..ஓஓஓஓஓஓஒ
துயர்களை மூடிடுவோம் ஆஆஆஆஆ
இமைகளை மூடிடுவோம் துயர்களை மூடிடுவோம்

மறுபடியும் விழித்தால் மனிதரைப் போல் பிறப்போம்
மறுபடியும் விழித்தால் புதுமனிதரைப் போல் பிறப்போம்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
பழக வரும் துணையும் விலகி விடும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

Wednesday, 6 August 2008

கதாநாயகி வரிசை: "ஊர்வசி" சாரதா

வேறெந்த நடிகைக்கும் முன்னால் ஊர்வசி என்ற பட்டம் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே விடை. ஒன்றல்ல...இரண்டல்ல.. மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய ஒரே நடிகை சாரதா. அந்த ஊர்வசி விருது இப்பொழுது சிறந்த நடிகைக்கான தேசியவிருது என்றழைக்கப்படுகிறது.

தமிழில் இவர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்திலும் தெலுங்கிலும் நிறையப்படங்கள் நடித்திருக்கிறார். அவர் வாங்கிய ஊர்வசி விருது இரண்டு மலையாளத்திலும் ஒன்று தெலுங்கிலும்.

இவர் நடித்த மிகப்பிரபலமான படமென்றால் அது துலாபாரம். அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்தப் படம் ஒரு துரதிருஷ்டமான பெண்ணின் கதையைச் சொல்வது. "பூஞ்சிட்டுக் கண்ணங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே" என்ற மிக அழகான பாடல் இசையரசி மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன் குரலிலும் அருமையாக அமைந்திருக்கிறது.

இவருக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் இசையரசி பாடியிருக்கிறார். அவைகளில் சில பாடல்களை இங்கே பார்க்கலாம்.

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த கவியரசர் பாடல் இது. குங்குமம் படத்தில் இடம் பெற்ற "தூங்காத கண்ணென்று ஒன்று" பாடலின் இனிமையை எப்படிச் சொல்வது. தூங்காத கண்ணைப் பற்றிச் சொல்லித் தூங்க வைக்க இசையரசியின் குரல் எப்படிப் பொருந்தி வருகிறது. கேட்டும் பார்த்தும் ரசியுங்கள்.



அடுத்த பாடல் தெலுங்குப் பாடல். இதில் இசையரசியோடு மற்றொரு இசைக்குயிலான எஸ்.ஜானகி அவர்கள் பாடியிருக்கிறார்கள். கார்த்திகை தீபம் என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு இசை சக்கரவர்த்தி. இதே படத்தைத் தமிழில் கற்பூரதீபம் என்று எடுத்த பொழுது இதே பாட்டை கங்கையமரன் பயன்படுத்தியிருக்கிறார். அதில் இசையரசி பாடியிருப்பது நடிகை அம்பிகாவிற்காக.



அடுத்த பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில். அதுவும் தமிழில். நடிகர் திலகம் நடித்த ஞானவொளி திரைப்படத்தில் மணமேடை மலர்களுடன் தீபம் என்று காதலனோடு சுகித்துக் களிக்கும் பெண்ணிற்காக பாடியிருக்கிறார் இசையரசி பி.சுசீலா. விரகம், காதல், துன்பம், இன்பம் அனைத்தும் கலந்து பாடியிருக்கும் இந்தப் பாடலையும் கேட்டு ரசியுங்கள்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, 4 August 2008

கதா நாயகி வரிசை:நவ்யா நாயர்

கதா நாயகி வரிசை: 8

நவ்யா நாயர். மிகவும் அழகான நடிக்கத்தெரிந்த நடிகை. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், மாயக்கண்ணாடி என எல்லாவற்றிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

இதோ இசையரசி சமீபத்தில் பாடிய அழகான பாடல்

நவ்யா நாயருக்கும் இசையரசி பாடிவிட்டார் ஆம் சில நேரங்களில் என்ற திரையில் ஸ்ரீகாந்த தேவாவின் இசையில் வைரமுத்துவின் வரிகள். அதே இனிமை அதே மென்மை ..

பொட்டு வைத்த முகத்தை
தொட்டு வைத்த தலைவா
உனக்கொரு உனக்கொரு கோரிக்கை
தொட்டு வைத்த முகமும்
விட்டு வைத்த அழகும்
உனக்கென்று உனக்கென்று காணிக்கை
காதலை தொடர்ந்தே திருமணம் நடக்கும்
திருமணம் நமக்கே காதலின் தொடக்கம்
இதயம் ஒன்று தான் இருவருக்கும்
உயிரென்று நினைத்தேன் உங்களை
உங்களுக்கு தருவேன் கண்களை


பொட்டு வைத்த முகத்தை
தொட்டு வைத்த தலைவா
உனக்கொரு உனக்கொரு கோரிக்கை


தலைவன் தந்த பூக்களை
தலையில் எடுத்து சூடுவேன்
மலர்கள் தந்த கைகளை
மார்பில் எடுத்து சூடுவேன்
என் சேலை போர்வை கொண்டு
உன்னை தூங்க செய்குவேன்
என் கூந்தல் ஈரம் கொண்டு
உனது தூக்கம் போக்குவேன்
உன் அசைவுகள் இடுகின்ற ஆணைக்கும்
இசைவுகள் தெரிவித்து வாழுவேன்

பொட்டு வைத்த முகத்தை
தொட்டு வைத்த தலைவா
உனக்கொரு உனக்கொரு கோரிக்கை
தொட்டு வைத்த முகமும்
விட்டு வைத்த அழகும்
உனக்கென்று உனக்கென்று காணிக்கை

தரியில் நெருங்கும் நூல்களோ
தரிக்கும் ஆடை ஆகுமே
உறவில் நெருங்கும் காதலோ
யுகங்கள் வரையில் வாழுமே

உன் பேரை சொல்லிடும்போதே
உயிரில் பாசம் ஊருமே
ஜென்மங்கள் மாறிய போதும்
ஜீவன் உன்னை சேருமே
இருதயம் பெருகிய நன்றியை
என் இருவிழி அருவிகள் காட்டுமே

பாடலை பார்த்து மகிழுங்கள்



Tuesday, 24 June 2008

பூர்ணிமா ஜெயராமன் - கதாநாயகி வரிசை 5

நடிகை பூர்ணிமா ஜெயராமனை...இப்பொழுது பாக்யராஜை யாரும் எளிதில் மறக்க முடியாது. பலதரப்பட்ட பாத்திரங்களில் நடித்த சிறப்பான நடிகை அவர். மும்பையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்த அவர் முதலில் மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானாலும் பயணங்கள் முடிவதில்லை படம் அவருக்குத் தமிழில் நட்சத்திரக் கதாநாயகியாக்கியது. முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்த அவர் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார்.

அவருக்காக இசையரசி பி.சுசீலா அவர்கள் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார்கள். இவர் திரையுலகில் வந்த காலகட்டத்தில் இளையராஜா அறிமுக இசையமைப்பாளர் என்ற நிலை மாறி நட்சத்திர இசையமைப்பாளர் என்று நிலை பெற்று விட்ட காலகட்டம். மெல்லிசை மன்னரும் நல்ல பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம். சங்கர் கணேஷ், டி.ராஜேந்தர் போன்றோரும் கலக்கிக் கொண்டிருந்த காலகட்டம். அந்த பொழுதில் வந்த இரண்டு பாடல்களைப் பார்ப்போம் இந்தப் பதிவில்.

முதல் பாடல் தாலாட்டுப் பாட்டு. அதுவும் டி.ராஜேந்தர் இசையில். கிளிஞ்சல்கள் படத்திற்காக. சின்னச் சின்னக் கண்ணா என்ற இந்த அழகிய பாடல் மிக இனிமையானது. கேட்டால் கிறக்கும் இந்தப் பாடல் நம்மையும் சின்னக் கண்ணனாக்கும். குழந்தைக்காகப் பாடும் இந்தப் பாடலில் மறைபொருளாக காதலனுக்கும் காதல் சொல்வாள் நாயகி. ஆகத் தாலாட்டும் இருக்க வேண்டும். குறும்பு கொப்புளிக்கும் காதலும் இருக்க வேண்டும். ரொம்பவும் சிக்கலான இந்தச் சூழ்நிலையில் இசையிரசியின் குரல் விரசம் துளியும் இல்லாமல் காதலையும் தாய்மையையும் சொல்வதைக் கேட்டு ரசியுங்கள். இந்தப் பாடலை நமக்காகத் தந்த நண்பர் குமரனுக்கும் நன்றி பல.




இரண்டாவது பாடல் இளையராஜாவின் இசையில். மலேசியா வாசுதேவன் உடன் பாடிய காதல் பாட்டு. அந்தக் காலத்துச் சிங்கப்பூரை இந்தப் பாடலில் கண்டு களிக்கலாம். இந்தப் படத்தில்தான் முதன்முறையாக இசைஞானியின் இசையில் மெல்லிசை மன்னரும் பாடியிருக்கிறார். சீனத்துப் பட்டு மேனி இளஞ்சிட்டு மேனி என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். பூர்ணிமா ஜெயராமனுக்கும் அழகாகக் குரல் பொருந்துவதையும் குழைவதையும் கேட்டு இரசியுங்கள். இந்தப் பாடலை நமக்காக youtubeல் தந்த நண்பர் ராஜேஷுக்கு நன்றி.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Thursday, 12 June 2008

தாலாட்டு தாராட்டு லாலி பாடா


தாலாட்டு தாராட்டு லாலி பாடா

எப்படி சொன்னாலும் பொருள் என்னவோ தாலாட்டு தான்
தாலாட்டு என்றாலே சுசீலாம்மாவிற்கு தனி இடம் உண்டு. மொழி எதுவாக இருந்தாலும் தாலாட்டு பாடுவதில் சுசீலாம்மாவிற்கு இணை சுசீலாம்மா தான்.. இதோ சில தாலாட்டுப்பாடல்கள் உ ங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து

தமிழில் எத்த்னையோ தாலாட்டு பாடல்கள் பாடியிருக்கிறார் எதை என்று சொல்வது
தாலாட்டு பாடுவது போல் பெண்ணின் பல்வேறு சோகங்களையும் சொல்லும் விதமாக அமைந்த பாடல் சித்தி திரையில் ஒலித்த "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளே". கவியரசரின் எழுத்துத்திறனுக்கு இந்த பாடல் ஒன்றே போதும் . இசையரசி பாடும் விதம் அடேயப்பா தாய்மை உணர்வை குரலில் பிரதிபலிக்க இசையரசியால் மட்டுமே இவ்வளவு கச்சிதமாக முடியும்

காலமிது காலமிது கண்ணுறங்கு


தெலுங்கிலும் பல தாலாட்டு பாடல்கள் உண்டு இருந்தாலும் இளையராஜாவின் இசையில் இசையரசி பாடிய லாலி லாலி என்ற சுவாதி முத்யம் படப்பாடல் தெலுங்கில் மிகச்சிறந்த ஒரு லாலி பாடல். படத்தில் அனைத்து பாடல்களையும் ஜானகி பாடியிருக்க இந்த பாடலுக்கு சுசீலாவை அழைத்ததும் காரணமாகத்தான் லாலி பாட சுசீலாவை விட சிறந்தவர் உண்டோ

இதோ



கன்னடத்திலும் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார் இதோ கல்யாணி என்ற திரையில் ஒலித்த நின்ன முகா அரவிந்தா என்ற பாடல்




மலையாளத்தில் இசையரசி பாடிய முதல் பாடலே ஒரு தாலாட்டு தான்
ஆம் பாடு பாடி உரக்காம் ஞான் தாமரப்பூம் பைதலே என்று தகஷிணாமூர்த்தி சுவாமிகளின் இசையில் பாடிய பாடல் மலையாள மக்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கும் ஒரு தாலாட்டுப்பாடல்

அதைத்தவிர பல தாலாட்டுப்பாடல்கள் பாடியிருக்கிறார் அதில் சில இதோ





Friday, 16 May 2008

பாட்டுச் சொல்லிக் கொடுத்த நடுவர் பி.சுசீலா

"ராகமாலிகா" என்னும் தொலைக்காட்சி இசை நிகழ்வில் நடுவராக இசையரசி பி.சுசீலா மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பாகத்தை இங்கே தருகின்றேன். "அத்தான் என் அத்தான்" என்ற பாடலை இளம் போட்டியாளர் பாடியபோது பி.சுசீலா இந்தப் பாடலின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லிக் கொடுத்துச் சிறப்பிக்கின்றார்.அப்போது கூடவே ரமேஷ் விநாயகமும் தன் பங்கிற்குக் கொடுக்கும் ஆலோசனையையும் காணொளியில் பார்த்து ரசியுங்கள்.

Tuesday, 8 April 2008

"என்ன சொல்லி நான் எழுத....!

ராணி தேனி திரைப்படம் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் 1982 இல் வெளிவந்திருந்தது. பாடகர் தீபன் சக்ரவர்த்தியை நாயகனாக்கி விஷப்பரீட்சை செய்திருந்த அந்தப்படத்தில் நாயகியாக மகாலஷ்மி நடித்திருப்பார். முன்னர் கல்யாணராமன் என்ற மெகா மசாலா வெற்றியைக் கொடுத்த இயக்குனர் என்ற நன்றிக்கடனுக்காக வை.ஜி.மகேந்திரனுடன் ஒரு துணை நடிகர் லெவலுக்கு கமலஹாசன் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதே நன்றிக்கடனை ஜி.என்.ரங்கராஜனுக்காக மகராசன் படத்திலும் கமல் செய்து கொ(கெ)டுத்தவர்.

"என்ன சொல்லி நான் எழுத, என் மன்னவனின் மனம் குளிர" என்ற அருமையான பாடல் இந்த ராணி தேனி திரைப்படத்தில் இசையரசி பி.சுசீலாவின் குரலில் என்றுமே கேட்பதற்கு இனியதொரு பாடலாக இருக்கின்றது. பாடல் இசை: இசைஞானி இளையராஜா.
இப்பாடலை வீடியோவாக வலையேற்றி உங்கள் ரசனைக்காகத் தருகின்றேன். கண்டு ரசியுங்கள்.

பாடல் வீடியோவிற்கான நேரடி இணைப்பு

Friday, 28 March 2008

அடுத்த ஒரு போட்டிப்பாடல்


அடுத்த ஒரு போட்டிப்பாடல்
கன்னட பாடல் .. மன்ற நண்பர்கள் கோபம் கொள்ளாமல் இருக்க இதோ சிறிய விளக்கம்

படம்: குரு சிஷ்யரு
இசை: கே.வி.மகாதேவன்
குரல்கள் : ஜானகி, இசையரசி


மன்னன் இன்பத்தில் களிப்புற்றிருக்க, நாட்டையும் மக்களையும்
மறந்திருக்க, இன்ப நிலையில் அவனது ஆசை நாயகி பாடுகிறாள்... மன்னா இந்த மெளனம் சரியா என்னிடம் பேசு இந்த பேதை பெண்ணுக்கு இறக்கம் காட்டு இதை பாடுவது ஜானகி


சவாலாக அரசி பாடுகிறாள் . காவலனே மக்களையும் கடமைகளையும் மறப்பது சரியா இது முறையா இதை பாடுவது இசையரசி

பாடல் நல்ல கர்நாடக ராகமான ஹிந்தோளத்தில் அமைந்துள்ளது
ஸ்வர ஜதியுடன் அழகான போட்டி
கேட்டு கண்டு மகிழுங்கள்

Saturday, 9 February 2008

பத்மபூஷன் விருது மகிழ்வில் இசையரசி

சன் டீவியின் பொங்கல் நிகழ்ச்சிகளை ஏற்கனவே வீடியோவில் பதிவு பண்ணி வைத்திருந்து இப்போது தான் போட்டுப் பார்த்தேன். அப்போது இடையில் வந்த சன் செய்திகளில் "இசையரசி பி.சுசீலாவுக்கு" பத்மபூஷன் விருது கிடைத்த செய்தியையும், அவரின் மன உணர்வையும் ஒளித்துண்டமாகக் காட்டியதைப் பார்த்து எங்கள் இசையரசி கூட்டுப் பதிவில் இதை இப்போது உங்களுடனும் பகிர்கின்றேன். இதோ:

Thursday, 7 February 2008

பாட்டுக்கு பட்டாபிஷேகம்

பாட்டுக்கு பட்டாபிஷேகம்

ஆம் இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக வந்திருந்தாலும் அந்த விருதுக்கு விருதுகிடைத்தது என்றே சொல்லவேண்டும் ஆம் அது இசையிடம் வந்து சேர்ந்துள்ளதே...


இவர் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தகுதியுடையவர். அதையும் சீக்கிரமே கொடுத்து கெளரவிப்பார்கள் என எதிர்ப்பார்ப்போம்.

இந்த உயரிய விருது பெற்ற இந்த நேரத்தில் அவர் ஒவ்வொரு மொழியிலும் பாடிய முத்தான ஒரு பாடலை தரலாம் என நினைத்தேன்.. இசையரசியின் அந்த மொழி ஆளுமையை கண்டு/கேட்டு ரசிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்
1.
தமிழ் மன்றத்தில் பதிவு செய்தால் முதலில் தமிழ் பாடல்
முத்தான பாடல் என்று சொன்னானே .. தமிழில் எல்லாமே முத்தான பாடல்தானே என்று நீங்கள் கூறுவது என் காதில் கேட்கிறது. பாடல்கள் பல இருந்தாலும் சில பாடல்கள் ஏதோ சில காரணங்களலால் சில பாடல்கள் நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் அப்படி ஒரு பாடல் தான் இது

ஆம் " ஒரு நாள் இரவில் கண்ணுறக்கம் பிடிக்கவில்லை" என்று பணத்தோட்டம் திரையில் அபிநய சரஸ்வதிக்கு இசையரசி பாடிய அருமையான பாடல் ..

படம்: பணத்தோட்டம்
இசை: மெல்லிசை மன்னர்கள்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்

இவர் பாடும் விதம் கேளுங்கள் .. தமிழ் இனிது அதை சுசீலாம்மாவின் குரலில் கேட்பது அதைவிட இனிது. கண்ணதாசனின் வரிகளும், மெல்லிசை மன்னர்களின் இசையும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலாக்கியது என்பது 100/100 உண்மை

இதோ பாடலை கண்டு கேட்டு மகிழுங்கள்

oru naal

2.
தமிழ் பாடலை தொடர்ந்து சுந்தர தெலுங்குப் பாடல்


தெலுங்கில் சுசீலா பாடல்கள் தமிழைவிடவும் கூடுதல் ஆதலால் எதை கொடுப்பது என்று யோசித்த வேளையில் அவருக்கு தேசிய விருது பெற்று தந்த "ஆகுலோ ஆகுனை" என்ற* பாடல் தான் நினைவிற்கு
வந்தது. தாசரி நாராயணராவ் இயக்கி நாகேஸ்வரராவ், ஜெயசுதா, ஜெயப்பிரதா நடித்து திரு ரமேஷ் நாயுடு இசையமைத்த படம். யேசுதாஸும் சுசீலாவும் மட்டுமே பாடியிருப்பார்கள். சுசீலாவிற்கும் விருது, யேசுதாஸுக்கும் விருது கிடைத்தது. அத்தனை பாடல்களும் பொக்கிஷங்கள். இன்றும் தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமான பாடலிது. தேவுலபள்ளி கிருஷ்ணா சாஸ்த்ரியின் வரிகளை பாராட்டாமல் இருக்க முடியாது

படம்: மேகசந்தேசம்
இசை: ரமேஷ் நாயுடு

இதோ பாடலை கண்டு கேட்டு மகிழுங்கள்





3.கடவுளின் சொந்த பூமிக்கு வருவோம் ஆம் மலையாளம் ..

மலையாள உலகிற்கு சுசீலாவை அறிமுகம் செய்தவர்
தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஆனாலும் மலையாள உலகிற்கு சுசீலாவின் குரலில் பல அற்புத காணங்களை உருவாக்கியவர் மலையாள இசையுலகின் தேவகான ராஜா திரு தேவராஜன் மாஸ்டர் அவர்கள். தேவராஜன் வயலார் சுசீலா கூட்டணி மலையாளிகளலால் என்றுமே மறக்க முடியாத கூட்டணி.

இந்த கூட்டணியின் ஒரு சிறந்த பாடல் இதோ

படம்: நதி
இசை: தேவராஜன்
வரிகள்: வயலார் ராமவர்மா





4.கன்னடம் இதிலும் சுசீலாம்மா எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார்

மிகவும் பிரபலாமான அமுதை பொழியும் நிலவே பாடலை கன்னடத்திலும் சுசீலாம்மா பாட அந்த பாடல் காலத்தால் அழியா பாடலானது

இதோ அந்த பாடல்

Saturday, 26 January 2008

”பத்மபூஷன்” சுசீலாம்மா



நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தில் கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் அமைதியான அழகான முத்தான உச்சரிப்பில் சுசீலாம்மாவின் ஓரு பாடல் என்மனதை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று நீங்களூம் கேளூங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA





தென் இந்தியாவின் லதாமங்கேஷ்கர் என்று திரு எஸ்.பி.பி அவர்களால் வர்ணிக்கப்பட்ட பி.சுசீலாம்மாவுக்கு இந்தியாவின் மிகப்பெரிய கவுர விருதான “பத்மபூஷன்” விருது வழங்கியிருப்பது. இசைப் பிரியர்களான நம் அனைவருக்கும் மிகப்பெருமை. அவரது இனிமையான குரலின் அடிமைகளில் அடியேனும் ஒருவன். பத்மபூஷன் சுசீலாம்மாவை வாழ்த்த வயதில்லையென்றாலும் அவர் நீடுழி வாழ வாழ்த்தி வணங்குகிறேன்.

போடோ உபயம்: நன்றி பி.சுசீலாம்மா தளம், மற்றும் லக்‌ஷ்மன் ஸ்ருதி தளம்.


Get this widget | Track details | eSnips Social DNA


சுசிலம்மாவின் அழகான உச்சரிப்புக்கு மற்றுமொரு அத்தைமகள் ரத்தினத்தை என்ற பாடல் பணக்காரகுடும்பத்தில், கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமிப்பில் என் மனதை மயக்கும் இந்த பாடலையும் அவர் பாதங்களில் உங்கள் சார்பாகவும் இசைப்பூக்களாக சமர்ப்பித்து வணங்குகிறேன்.

Thursday, 24 January 2008

சோலை புஷ்பங்களே...என் சோகம் சொல்லுங்களேன்..!

"இங்கேயும் ஒரு கங்கை" திரைப்படம், முரளி மற்றும் தாரா (பின்னாளில் கன்னடப் படவுலகில் பின்னிய அதே தாரா) நடிக்க, மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இளையராஜாவின் இசையில் மணிவண்ணன் இயக்கிய எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களுமே பெரிதாகப் பேசப்படாவிட்டாலும், நூறாவது நாள் படத்தில் வரும் "விழியிலே", தீர்த்தக்கரையினிலே படத்தில் வரும் "விழியில் ஒரு கவிதை", முதல் வசந்தம் திரையில் வரும் "ஆறும் அது ஆழமில்ல" வரிசையில் வருவது தான் இந்த இங்கேயும் ஒரு கங்கை திரைப்பாடலான "சோலை புஷ்பங்களே" என்ற பாடல்.

இசையரசி சுசீலாவுடன், இணைந்து பாடியிருக்கின்றார் கங்கை அமரன். இளையராஜாவைப் பொறுத்தவரை தன் தம்பி கங்கை அமரன் இயக்கிய படங்களில் கூட அதிகம் வாய்ப்புக் கொடுத்ததில்லை. கங்கை அமரனுக்கு கிடைத்த மிகச் சிறந்த பாடல்களில் இது தான் என் தெரிவில் மிகச் சிறந்தது என்பேன். கூடவே சுசீலா அம்மாவும், அமரனோடு சேர்ந்து ஒரே நீரோட்டத்தில் கலந்து பாடுவது மனசுக்குள்ளுள் கங்கை போல பிரவாகிக்கின்றது. காதல் சோகம் மட்டுமல்ல, இடிந்து உட்கார்ந்திருக்கும் எந்த மனசுக்கும் இந்தப் பாடல் ஓர் ஒத்தடம்.



Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, 13 January 2008

"பூப்பூக்கும் மாசம் தை மாசம்" கதாநாயகி வரிசை 4 - குஷ்பு

தை மாதம் என்றாலே தமிழர்களுக்கு ஓர் உவகை பொங்கும் காலம். எங்களூர் இயல்பிலேயே தோட்டம் நிறைந்த செம்பாட்டு வளம் கொழிக்கும் அசல் கிராமப்புறம் என்பதால் தைமாதப் பொங்கலின் மகத்துவத்தை நன்றாக உணர்ந்தே இத் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். எங்களூர்ப் பொங்கல் நினைவுகளை "வெடி கொழுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்" என்று என் மடத்துவாசல் பிள்ளையாரடிப் பதிவில் பதிந்திருக்கின்றேன்.

தைப்பொங்கல் வரும் போது "தை"யைக் குறிக்கும் பாடல்களும் நினைப்புக்கு வரும். வானொலிகளும் அடிக்கொரு தடவை அவற்றைச் சலிக்காமல் ஒலிபரப்பும். அப்படியான ஒரு இனிய பாடல் தான் "பூப்பூக்கும் மாசம் தை மாசம்". இசையரசி பி.சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கும் அந்தப் பாடலின் இசை, சொல்லியும் தெரிய வேண்டுமா? அப்படியாயின் அது இளையராஜா என்று சொல்லி வைக்கின்றேன்.

இப்பாடலின் முதல் அடிகள் மட்டுமே தை மாசத்தைச் சொல்லி வைத்தாலும், மற்றைய வரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் மனதில் உவகை பொங்க இந்தக் காதல் ரசம் கொட்டும் பாடலைப் பொதுவான பாடலாக யாரும் ரசிக்கலாம்.

கதாநாயகி வரிசையில் குஷ்புவுக்காக பி.சுசீலா அவர்கள் பாடியிருக்கும் இப்பாடலை விடுத்து இன்னொரு மிகச் சிறந்த தேர்வைக் கொடுக்க முடியாது.

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இப்பாடலை ரசித்து மகிழ உங்களை அழைக்கின்றேன்.


You Tube: nsureshrasr

Thursday, 3 January 2008

யார் யார் யார் அவள் யாரோ




சுசீலாம்மா, பி.பி.ஸ்ரீனிவாச் கொஞ்சும் குரலில் அழகான பாடல் கேளுங்கள்.

படம்: பாசமலர்
பாடகர்கள்: பி.பி.எஸ், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

சலவைக் கல்லே சிலையாக
தங்கப் பாளம் கையாக
மலர்களில் இரண்டும் விழியாக
மயங்க வைத்தாளோ ஓஓ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

முத்து மணிதிரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
முத்து மணிதிரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ

செக்கச் சிவந்த இதழாமே
சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச் சிவந்த இதழாமே
சிந்தும் புன்னகை மந்திரமோ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்

நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானால்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானால்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்

மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, 2 January 2008

வெள்ளைக்குயில் சுசிலாம்மா - எஸ்.பி.பி



எஸ்.பி.பி யின் அபிமான வெள்ளைக்குயில் சுசிலாம்மா.

Get this widget | Track details | eSnips Social DNA


சுசிலாம்மாவை பற்றி நாம் சொல்றதுக்கு முன் டாக்டர் எஸ்.பி.பி. அவர்களை சுசிலாம்மா எப்படி கவர்ந்தார்கள் என்பதை என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் பல தடவை
குறிப்பிட்டுள்ளார்கள் ரசிகர்கள் அனைவரும் கேட்டிருக்க முடியும். இருந்தாலும் இந்த 2008 புதுவருடத்தில் முதல் தேதியன்று ஒரு பேட்டியில் அவர் சுசில்லாம்மாவை பற்றி குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வெள்ளைக்குயிலின் குரலைப் பற்றி அவர் அப்படி என்னதான்
கூறியிருப்பார்? நீங்களே கேளுங்களேன். இந்த ஒரு நிமிட பதிவையே ராகவன் சாரின் "இசையரசி" தளத்தில் என்னுடைய முதல் பதிவாக பதிந்து உங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொண்டு நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.