2 comments

இசைஞானி இளையராஜா இசையில் இதுவரையில் இசையரசி பி.சுசீலா பாடி வெளிவந்த பாடல் எது?

இந்தக் கேள்வியைப் பொதுவில் கேட்ட பொழுது “கற்பூர முல்லை ஒன்று”, “முத்துமணிமால” என்று ஓரளவு நெருங்கிய விடைகள் கிடைத்தன. ஆனால் அந்தப் பாடல்களுக்குப் பிறகும் ஒரு பாடல் வெளிவந்திருக்கிறது 1993ல்.

இளையராஜாவின் இசையில் முதன்முதலாக பாடல் பதிவு செய்யப்பட்டது பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் குரலில். ஆனால் அந்தப் படம் எடுக்கப்படாமலே மறைந்தது. அந்தப் பாடலையோ அதன் மெட்டையோ வேறெங்கேனும் இளையராஜா பயன்படுத்தியிருக்கின்றாரா என்பது குறித்து தகவல் இல்லை.

அன்னக்கிளி படத்தில் ராஜா இசையில் சுசீலாம்மா பாடிய முதற்பாடல் திரையில் வந்தால், அரண்மனைக்கிளி படத்தில் இந்தப் பாடல் வந்திருக்கிறது. இதைக் கடைசிப் பாடல் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை.

1993ல் ராஜ்கிரண் நடித்து வெளிவந்த படம் அரண்மனைக்கிளி. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள்.

அப்படியிருக்க அந்தப் படத்தில் முதல் பாடலாக வருவதுதான் “நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா”.

ஒரு நாடோடிக் கூட்டம். அதில் ஒருத்தி பருவம் அடைந்திருக்கிறாள். அவளுக்கு அந்தக் கூட்டம் சீர் செய்து பாடும் பாடல்தான் இது.

1993 என்பது இசையரசி பி.சுசீலா பாட வந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகான காலகட்டம். இசைப்புயல் வேகமாக வீசிக் கொண்டிருந்த காலகட்டத்திலும் தன்னுடைய குரல் இன்றளவும் புதுமையானதே என்று மீண்டுமொருமுறை நிரூபித்த பாடல்.

திரும்பத் திரும்பச் சொன்னாலும் சுசீலாம்மாவின் தமிழ் உச்சரிப்புக்கு இன்றும் ஒரு மாற்று இல்லை என்பதே உண்மை. அதைச் சொல்லத் தயங்கவும் தேவையில்லை. ஒவ்வொரு சொல்லும் துல்லியமாக நமது காதில் விழுகிறது.

இந்தப் பாடலோடு நின்று விடாமல் இந்தக் கூட்டணியில் இன்னுமொரு பாட்டு கிடைத்தால் நாம் எல்லாரும் மகிழ்வோம்.

சரி. இப்போது இந்தப் பாட்டை நாமெல்லாம் ரசிப்போம்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

0 comments

இன்னிசைப் பாடகர்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையரசி பி.சுசீலா அவர்களுடன்  இன்னிசைப்பாடகர்கள் இணைந்து பாடிய பிரபல பாடல்கள் வானொலியில் கேட்க மிகவும் இனிமையாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. எனது
இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் எப்போது நிகழ்ச்சி  வழங்கினாலும் வானொலியில் அதிகம் ஒலிபரப்படாத பாடல்களை தான் தேடிப் பிடித்து வழங்குவார் அந்த வகையில் நான் ரசித்த இந்த  ஒலித்தொகுப்பிலும் அறிதான பாடல்கள் வழங்கினார். இதோ உங்கள் செவிக்கும்.

1. சொட்டு சொட்டு சொட்டுன்னு - ஆடவந்த தெய்வம் - டி.ஆர்.மகாலிங்கம்
2. புத்தம் புது மேனி -சுபதினம் - பாலமுரளி கிருஷ்னா
3. முடியாது சொல்ல முடியாது - கண்டசாலா - மஞ்சள் மகிமை
4. ஏ குட்டி என் நேசம்-நாகேஸ்வரராவ் - குடும்பம்
5. காவியமா நெஞ்சில் ஓவியமா -ஜெயராமன் - மஞ்சள் மகிமை
6. காதல் என்றால் ஆணும் - ஏ.எல்.ராகவன் - பாக்யலக்‌ஷ்மி
7. வாம்மா வாம்மா சின்னம்மா - சீர்காழி கோவிந்தராஜன் - தாயில்லா பிள்ளை
8. ஆனந்தஇல்லம் நான் கண்ட உள்ளம் - ஏ.எம்.ராஜா - இது இவர்களின் கதை
9. அனுபவம் புதுமை - பி.பி.ஸ்ரீனிவாஸ் - காதலிக்க நேரமில்லை
10. லவ் லவ் எத்தனை கனவு - டி.எம்.சௌந்தரராஜன் - அதே கண்கள்
11. மாதமோ ஆவணி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - உத்தரவின்றி உள்ளே வா
12. விழியே கதை எழுது - கே.ஜே.யேசுதாஸ் - உரிமைக்குரல்


இசையரசியுடன் இன்னிசைப் பாடகர்கள் ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.


பாசப்பறவைகள் தளத்திற்க்கு நன்றி.

0 comments



நேயர்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.

கண்கள் மூலம் பார்த்தாலே இயற்கை காட்சிகளின் அழகை ரசிக்க முடியும். இருந்தாலும் இசையின் அழகை ரசிக்க சுசிலாம்மாவின் சுந்தரகுரலிலும் மனதை கரைக்கும் கானங்கள் தொகுப்பின் அழகை ரசிக்க நம் காதுகளாலும் முடியும்
அந்த அழகை அருகே வரவேற்று அள்ளி வழங்குபவர் யவ்வன குரலின் சொந்தக்காரர் யாழ் சுதாகரின் தொகுப்பு. சுசில்லாம்மாவின் பாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் அவரின் பாடல்களின் ஒலித்தொகுப்பை ரசிகர்களின் ரசணைகளூடன் சேர்த்து வழங்கிய அறிவிப்பாளர் யாழ் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.உன்னை ஒன்று கேட்பேன்
2.மானாட்டம் தந்த மயிலாட்டம்
3.ஆலயமணியின் ஓசையை
4.தென்றல் வரும் சேதி வரும்
5.மாலை சூடும் மணநாள்
6.யாருக்கு மாப்பிள்ளை யாரோ
7.பார்த்தால் பசி தீரும்
8.அழகே வா அருகே வா
9.வா அருகில் வா
10.நானே வருவேன்


அழகே வா அருகே வா தலைப்பில் யாழ் குரலில் பாமாலை தொகுப்பு இங்கே.


நன்றி: பாசப்பறவைகள் தளம்

1 comments

இன்றைய பாடல்

மானச வீணா மது கீதம்

திரை: பந்துலம்மா
இசை: ராஜன் நாகேந்திரா
குரல்கள்: இசையரசி, பாலு

மிகவும் அருமையான பாடல் .. இதோ

4 comments

வணக்கம்

ஆண்டாண்டு காலமாக தான் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களால் நம்மையெல்லாம் மகிழ்வித்தும் வாழ்வின் பலப்பல சமயங்களில் துணையிருந்தும் உதவியிருக்கும் இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

நாட்டில் சிலரைப் பார்க்கையில் இவர் ஏன் பிறந்தார் என்று கேள்வி தோன்றும். இசையரசியின் இன்னிசைப் பாடல்களைக் கேட்கும் பொழுதுதான் இவர் நமக்காகப் பிறந்தார் என்று தோன்றும்.

எத்தனை பாடல்கள்! தாலாட்டும் தாயாக, ஆதரவூட்டும் மனைவியாக, நல்லதொரு தோழியாக, குறும்பு மிக்க சுட்டிப் பெண்ணாக, எழுச்சியூட்டும் புரட்சிப் பெண்ணாக, நம்முடைய நெஞ்சில் இருக்கும் சோகத்தையெல்லாம் நெருப்பிட்டு உருக்கி கண்ணீராய் வழிந்து ஓடச் செய்து மனதை இலேசாக்கும் ஆதரவாக, இறைவன் புகழைப் பாடி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் வழிகாட்டியாக என்று பலப்பல உணர்ச்சிகளில் தனது இனிய குரலால் பாடியிருக்கிறார்.

ஒரு முறை இன்னொரு மிகப்பெரிய பாடகியான எஸ்.ஜானகி குறிப்பிட்டார், “இப்பிடி ஒரு சிறப்பான குரல் ஆண்டவனிடத்தில் எவ்வளவு கெஞ்சினாலும் கிடைக்காது.” உண்மை. எஸ்.ஜானகி அவர்களின் பாடும் திறன் இசையரசியின் திறமையை நன்கு உணர்ந்து சொன்ன வாக்கியங்கள். கற்றாரைக் கற்றோரே காமுறுவர்.

இன்றைக்குத் தமிழகத்தில் பிறந்த பாடகர்களே தமிழைக் குதறிப் பாடும் பொழுது, தமிழைச் சரியாக உச்சரியுங்கள் என்று கெஞ்சிக் கேட்கும் தெலுங்கச்சி இவர். ஆந்திர மாநிலத்தின் விஜயநகரத்தில் பிறந்தவர். ஒரு முறை இப்பிடிச் சொன்னார். “நான் பொறந்தது ஆந்திரா. அதுனால தாய்மொழியான தெலுங்கு ஒரு கண். ஆனா என்னோட இன்னொரு கண் தமிழ்.” இதை தனது உச்சகட்டக் காலத்தில் சொல்லியிருந்தால் வாய்ப்பிற்காக சொல்லியிருப்பார் என்று நினைக்கலாம். ஆனால் திரைப்பாடல்கள் வேண்டாம் என்று பக்திப் பாடல்கள் மட்டும் பாடி ஓய்வெடுக்கும் காலத்தில் இப்பிடிச் சொல்ல நல்ல உள்ளம் வேண்டும். உங்களை வணங்குகிறோம் அம்மா. நீங்கள் எங்கு பிறந்தாலும் தமிழர்களாகிய நாங்கள் மார்தட்டிச் சொல்வோம் நீங்கள் தமிழ்ப் பாடகி என்று.

உங்களைத் தமிழ்ப் பாடகி என்று சொல்வது எங்களுக்குப் பெருமைதான். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நீங்கள் டி.எம்.எஸ் அவர்களோடு இணைந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துதான் இன்றைக்கும் தமிழொலிக்கும் எல்லாப் பள்ளிகளிலும் எல்லா அரசு விழாக்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உங்களைப் பெற்ற தெலுங்கு மொழிக்குக் கூட பெற முடியாத பெருமையை நமது தமிழ் மொழி உங்களிடம் பெற்றது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் தாங்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இன்றைய பொழுது தாயாக நீங்கள் பாடிய சில பாடல்களை நாங்கள் இங்கு கேட்டு மகிழ்கிறோம். தமிழும் இனிமையும் இந்தப் பாடல்களில் உங்கள் குரல்தான் கொடுத்தது. நன்றி. நன்றி.

திரைப்படம் - சிப்பிக்குள் முத்து
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - வைரமுத்து



திரைப்படம் - நிலவே மலரே
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் -



திரைப்படம் - கேளடி கண்மணி
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - வாலி



திரைப்படம் - புதிய முகம்
இசை - இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
பாடல் - வைரமுத்து



திரைப்படம் - கடல் மீன்கள்
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - கவியரசர் கண்ணதாசன்



மீண்டும் ஒரு முறை உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழுள்ள வரைக்கும் உங்கள் புகழ் நிலைக்கும் என்று வாழ்த்தி வணங்குகிறோம்.

அன்புடன்,
உங்கள் ரசிகன்

5 comments

On behalf of the millions of her admirers we wish her a Very Happy Birthday. May
God shower her health and wealth for ever.

Hail the lord for giving us such a wonderful musician.

I've created a video for this special occasion.

http://www.youtube.com/watch?v=sdUjAp9etlk

some rare songs of hers for your listening pleasure

1. Nilavo neruppo from Muyalukku moonu kaal

http://www.4shared.com/audio/O7jRGjTs/Nilavo_neruppo-Muyalukku_moonu.html

2.Naan mohini-Ratha katteri

http://www.4shared.com/audio/O1SdhiR7/Naan_mohini-Ratha_katteri-PS.html

3.Radhai oruthi irundhaal-Ival oru pudhu yugam

http://www.4shared.com/audio/AzXdqn7n/radhai_endru_oruthi-Ival_oru_p.html

4.Veenai enadhu kuzhandhai- OOnjaladum uravugal

http://www.4shared.com/audio/jkyA82WO/veenai_enadhu-Oonjaladum_uravu.html

5.Prema veeneya-Shubhaashaya
beautiful Kannada song by PS

http://www.4shared.com/audio/FfI69pc6/Prema_veenaya-Shubhaashaya-PS-.html


Will share more rare songs later.

Once again let's pray the almighty for Melody Queen's Long and healthy life.

4 comments

தாய்மை பொங்கும் குரலில் பாடுவது என்பது இசையரசி பி.சுசீலாவிற்கு மிக எளிதான வேலை என்றே நினைக்கிறேன். பொதுவாகவே மெல்லிசை மன்னரிலிருந்து இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் வரைக்கும் அவருக்கு தாய்மை மிகுந்த பாடல்களைக் கொடுத்துள்ளார்கள். கண்ணுக்கு மை அழகு கூட தாய்மை மிகுந்த காதல்தானே.

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது கங்கை அமரனின் இசையில் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தாயின் பாசப்பரிதவிப்பு. பொதுவாகவே மகிழ்ச்சி பொங்கியிருக்கும் திருமணப் பாடல்கள். ஆனால் இதில் அந்தத் தாய் உருகிப் பாடுகிறாள். மனம் கெஞ்சி ஏதோ எடுத்துச் சொல்கிறாள். ஐயா.. மாப்பிள்ளை... என் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பசிக்கிறது சோறு வேண்டும் என்று கேட்கும் வாயில்லாதவள். அன்பை வெளிப்படையாக உரைக்கும் வாயில்லாதவள். ஆம். அவளொரு ஊமை.

டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாசத்தைப் பொழிந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு இசை கங்கை அமரன். மிக அருமையான இசை. நீதிபதி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல் மிக இனிமையானது என்பதில் ஐயமில்லை. கேட்டு மகிழுங்கள்.



அன்புடன்,
ஜிரா(எ)கோ.இராகவன்