2 comments

இசை ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

புத்தாண்டு சிறப்பு பாடலாக இதோ ...

தேனே தென்பாண்டி மீனே பாடலின் தெலுங்குவடிவம்..
தமிழில் ஜானகி பாடிய எத்தனையோ பாடல்களை தெலுங்கில் இசையரசி பாடியிருப்பார்..அப்படி அவர் பாடிய பாடலக்ளில் இது மிகவும் சிறந்த பாடல்
கேட்டு ரசியுங்கள்

படம்: உதயகீதம்
பாடல்: லாலி நா பால வெல்லி

0 comments



பொன்னழகு ‍ பெண்ணழகு‍





திரையிசையில் எத்தனையோ குரல்கள் ஒலித்திருந்தாலும்
பெண்மையின் குரலாக ஆம் பெண்மையின் மென்மை, கோபம் என எல்லாவகையாகவும் ஒலித்த குரல் இசையரசியுனுடைய குரல்

இசையரசியும் எல்.ஆர். ஈஸ்வரியும் எத்தனையோ (female dueட்ச்) அதாவது
இரு பெண்களுக்கு பாடியிருக்கிறார்கள்
இங்கே ஆண்வேடமிட்டவருக்கு எல்.ஆர்.ஈஸ்வரியும், மஞ்சுளாவிற்கு இசையரசியும் குரல்கொடுக்க ஒரு அழகான மேடை நாடகம் அரங்கேறுகிறது

ரிக்ஷாக்காரனில் அதிகம் பிரபலமடையாத பாடல் ..
வாலியின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும் அற்புதம்

எம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே எம்.எஸ்.வி அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல .. ஒவ்வொரு பாடலும் கடலில் மூழ்கி எடுத்த முத்து போல விலைமதிப்பற்றது... இதிலும் இந்த பாடலை கேளுங்கள் .. அடேயப்பா மேடை பாடலில் கூட இத்தனை விஷயங்களை புகுத்த முடியும் என நிரூபித்திருப்பார்..

இசையரசியின் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் பொன்னழகு பெண்மையின் அழகு

பாடலை பார்த்து மகிழுங்கள்

13 comments

"தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி" எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மெட்டும், இசையும் கலந்து மனசுக்குள் நர்த்தனமாடும் பாட்டு. சன் டீவியின் சப்தஸ்வரங்கள் போன்ற இசைநிகழ்ச்சிகளில் அதிகம் பாடப்பட்டு அடிக்கடி புதுப்பிக்கப்படும் பாடலும் கூட. நடன நிகழ்ச்சிகள் போன்ற கலைவிழாக்களுக்கு அதிகம் உபயோகிக்கப்படும், உபயோகிக்கப்படக் கூடிய பாங்கில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது இவ்வினிய பாடல்.

பாடலின் ஒவ்வொரு வரிகளும் இசையரசியினால் மெருகேற்றப்பட்டு இன்னொரு பாடகியை இப்பாடலுக்கு நிரப்பமுடியா அளவுக்குச் சிறப்பாகச் செதுக்கப்பட்டிருக்கின்றது. உதாரணத்துக்கு

"ஊமைத் தென்றல் வந்து என்னைக் கொல்கிறதே,
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே"

என்ற வரிகளை அவர் பாடும் கணம் கேட்கும் போது நெஞ்சில் பிரவாகம் அள்ளி வியாபிக்கின்றது. தேர் கொண்டு சென்றவனைத் தன் தோழியிடம் வினாவும் பாங்கை உணர்வுபூர்வமாக வரிகளுக்கு ஏற்ற இறக்கம் கொடுத்துச் சிறப்பித்திருக்கின்றார் இசையரசி பி.சுசீலா. "என்னவொரு வேதனை.....பத்துவிரல் சோதனை" என்று அவர் கனியும் போது தேர் கொண்டு சென்றவனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வர மனம் பரபரக்கின்றது. வைரமுத்துவின் வைர வரிகள் ஓவ்வொன்றுக்கும் ஓவ்வொரு பொற்காசுகள் (இருந்தால்) கொடுக்கலாம்.


இசைஞானி இளையராஜா இசையில் இசையரசி பி.சுசீலா பாடும் இப்பாடல் "எனக்குள் ஒருவன்" திரையில் இடம்பெற்றதாகும். இத்திரைப்படம் 1984 இல் கவிதாலயா தயாரிப்பில் கமல்,ஸ்ரீபிரியா நடிப்பில் வந்த மறுபிறவிக்கதை. இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
சி.வி.ஆர், கோபி போன்ற வாலிபக் குருத்துக்களுக்காக ஒரு தகவல் இப்படத்தில் தான் ஷோபனா தமிழில் அறிமுகமானார்.

இதே பாடலின் மெட்டை மலையாளத்தில் அதே ஆண்டு வெளிவந்த "ஒன்னானு நம்மள்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாசை வைத்துப் பாட வைத்திருக்கின்றார் இசைஞானி. அதைப்பற்றி இங்கே வீடியோஸ்பதி பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன்.


இன்றைய கதாநாயகி வரிசையில் ஸ்ரீபிரியாவிற்காக அமையும் இப்பாடல் அவருக்கான கன கச்சிதமான தேர்வென்றே நினைக்கின்றேன். அவர் பரத நாட்டியாமாடும் இப்ப படத்தில் அவர் நடித்திருக்கின்றார். எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் முன்னணியில் இருந்த காலத்தில் பல பாடகிகள் குரல் கொடுத்திருந்தாலும் பி.சுசீலாவின் குரல் இவரின் குரல் அமைப்புக்கும் ஏற்றதென்றே நினைக்கின்றேன். அன்னை ஓர் ஆலயம் திரையில் வரும் "நதியோரம் நாணல் ஒன்று நாட்டியம் ஆடிடக் கண்டேன்" என்ற ஜோடிப்பாடலும் ஸ்ரீபிரியாவுக்கான பி.சுசீலாவின் இன்னொரு இனிய பாடல். (கஷ்டப்பட்டு வீடியோவை ஓடவிட்டு பதிவுக்காகப் பொருத்தமான இப்பாடலின் screen shot ஐயும் எடுத்துப் போட்டிருக்கின்றேன்)

சரி, இனி தேர் கொண்டு சென்றவனை ரசியுங்கள்.

2 comments



எத்தனையோ மொழிகளில் சுசீலாம்மா பாடியிருந்தாலும் ஹிந்தியில் அவ்வளவாக பாடவில்லை என்பது எல்லோருக்கும் ஒரு குறையாகவே உள்ளது..




சலீல் செளத்ரி சுசீலாம்மாவை ஹிந்திக்கு அழைத்தும் ஏனோ சுசீலாம்மா செல்லவில்லை.. சலீல் செளத்ரி சொன்னது ஆஷாஜி மாதிரியும் இல்லாமல் லதாஜி மாதிரியும் இல்லாமல் புதுவிதமாக இருக்கிறது என்று தான் . அது 100/100 உண்மை என்பதை இந்த பாடலை கேட்டாலே தெரியும்

இதை தவிற இன்னும் சில பாடல்களை பாடியிருக்கிறார்.

இதோ " உய் மா பக்லி மேரா நாம் ரக் தியா"

படம்: பச்பன்
இசை: லக்ஷ்மிகாந்த் − பியாரிலால்



14 comments

80 கள் நடிகை ராதிகாவுக்குப் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். நிறையப் படங்கள் இவரை மையப்படுத்தியே வந்திருந்தன. குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் வாயால் "கலையரசி" என்ற பட்டத்தையும் பெற்றதோடு அவரின் வசனத்தில் மிளிர்ந்த பல படங்களில் நடித்திருக்கின்றார் ராதிகா. கூடவே எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்தவை தான் பல.



இங்கே ஒலிக்கப் போகும் பாடல் தென்றல் சுடும் என்ற திரையில் இருந்து ஒலிக்கின்றது. கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் மனோபாலா இயக்கியது இப்படம். "Return to Eden" என்ற அவுஸ்திரேலியத் தொலைக்காட்சித் தொடர் பின்னர் ஹிந்தியில் நடிகை ரேகாவை வைத்து " Khoon Bhari Maang" வெளிவந்திருந்தது. அப்படமே "தென்றல் சுடும்" திரையின் மூலக் கரு.

கதாநாயகி வரிசையில் ராதிகாவைத் தேர்ந்தெடுத்து விட்டு இசையரசி பி.சுசீலாவின் குரலில் ராதிகா நடித்த இரண்டு பாடல்களில் எதை எடுப்பது என்று முதலில் திணறி விட்டேன். முதலில் "நினைவுச் சின்னம்" திரையில் வந்த "ஏலே இளங்கிளியே என்னாசைப் பைங்கிளியே" பாடலை எடுக்கலாமா என்று சபலம் தட்டியது. ஆனால் வெற்றி பெற்றதே "தென்றல் சுடும்" திரையில் வரும் "தூரி தூரி தும்மக்க தூரி" என்ற பாடல்.


இந்தப் பாடல் படத்தில் குழந்தைகளோடு ராதிகா பாடும் சந்தோஷ மெட்டிலும், பின்னர் இழந்த குழந்தைகளை நினைத்துப் பாடும் சோகராகமாக இரு வடிவில் இருக்கும். இங்கே நான் தருவது சோக மெட்டு. வழக்கமாக ராஜா இசையில் வரும் குடும்பப் பாட்டுக்கு விலக்காக புதுமாதிரி கிட்டார் இசையும் வாலியின் வரிகளுமாக குதூகலிக்கும் பாட்டு இது.


இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலா பாடும் இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். வலையுலக சுட்டிப்பதிவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம் ;-)
Get this widget | Track details | eSnips Social DNA

6 comments

பழைய நடிகை விஜயகுமாரியை யாரும் மறந்திருக்க முடியாது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்ததை இன்றைக்கும் கே.டிவி நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறதே. அவருக்காக இசையரசி நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றாலும் இந்த ஒரு பாடல் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது.

கருநிறமென்பது அழகன்று என்று ஒரு மூடநம்பிக்கை இன்றும் உலகெங்கும் இருப்பதை நாம் அறிவோம். அது ஒரு பெண்ணானால்? அந்த நிறத்திற்காகவே அவள் பழிக்கப்பட்டாள்? இழிக்கப்பட்டாள்? அந்த வேதனனயை என்ன சொல்வாள்?

கருப்பாக இருக்கும் ஆண்டவன் வேண்டும். பெண் வேண்டாமா? அதுதான் அவள் கேட்கும் கேள்வி? அதற்கு விடை இன்றும் நம்மிடையே இல்லை.

நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்திற்காக சுதர்சனம் இசையில் கவியரசர் கண்ணதாசனின் பாடல் நமக்காக இசையரசி பி.சுசீலா அவர்கள் குரலில் கிடைக்கிறது. கேளுங்கள்.

இந்தப் பாடலையும் தந்து அதை விருப்பமாகவும் வெளியிட்ட நண்பர் கூமுட்டை அவர்களுக்கு நன்றி பல.



அன்புடன்,
கோ.இராகவன்

4 comments



இன்று இசையரசியின் பிறந்த நாள் ..

இசையின் பிறந்த நாள் ..

இசையரசி எல்லா வளத்துடனும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.



Let's wish our Melody Queen a Very HAPPY BIRTHDAY
பிறந்த நாள் பரிசாக இரண்டு சிறப்பு பாடல்கள்
2 special songs

1. பாமகரிசா (Pamagaresa )

ஒந்தே ரூபா இரடு குணா (ondhe rupa iradu guna)

சலீல் செளத்ரி (salil chowdry)

ஆர்.என். ஜெயகோபால் (R.N.Jayagopal)



பாலுவும் சுசீலாவும் பாடும் அழகை என்னவென்று சொல்வது

2. மனசு மனசின்டே காதில் (manasu manasinte kaadhil)
சோட்டானிக்கர அம்மா ( chottani kara amma)
ஆர்.சேகர் (R.Shekar)

ராத்திரி என்றால் இவ்வளவு இதமாகத்தான் இருக்க வேண்டும்
மதுரக்குரலோன் யேசுதாஸும்,சுசீலாவும் பாடும் அழகை சொல்ல வார்த்தைகளே போதாது.

16 comments

"நெற்றிக்கண்" திரைப்படம் 1981 ஆம் ஆண்டு கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அன்றைய மசாலா இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்திருந்தது. முன்னர் கலாகேந்திரா என்ற நிறுவனம் மூலம் நண்பர்களுடன் கூட்டாகத் தயாரிப்பில் ஈடுபட்ட பாலசந்தர் சொந்தமாக கவிதாலயா நிறுவனத்தைப் பின்னர் ஆரம்பித்திருந்தார்.

என் நினைவுக்கு எட்டியவரை கவிதாலயாவின் முதல் தயாரிப்பு "நெற்றிக்கண்" தான். இந்தப் படத்தில் மன்மதராஜாவாக தந்தை ரஜினி, சிறீ ராமன் குணாம்சத்தில் மகன் ரஜனி என்று இரட்டை வேடமிட்டிருப்பார்கள். கூடவே சரிதா, மேனகா போன்றோர் நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் "ராமனின் மோகனம்", "தீராத விளையாட்டுப் பிள்ளை", போன்ற அருமையான பாடல்களுடன் முத்தாய்ப்பாக "மாப்பிளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு" என்ற பாடலும் இருக்கும். பி.சுசீலா அம்மாவுடன் மலேசியா வாசுதேவன் இணைந்து பாடியிருக்கின்றார்.
இப்பாடலின் சிறப்பு என்னவென்றால் பொதுவாக அடக்கமாக வந்த பாடல்கள் பலவற்றுக்குச் சொந்தக்காரியான பி.சுசீலா சற்றே வேகமெடுத்துப்பாடியிருப்பார். கண்ணதாசன் வரிகளில் மாமனை எள்ளி நகையாடும் பாடல் வரிகளை அனாயசமாகப் பாடியிருப்பார்.

இன்னும் ஒன்று முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது. அது இப்பாடலுக்கு இளையராஜாவால் வழங்கப்பட்ட இசை. இதே படத்தில் "தீராத விளையாட்டுப் பிள்ளை" பாடலை மேற்கத்தேயப் பாணியில் வித்யாசமாகக் கொடுத்தது போல, "மாப்பிளைக்கு மாமன் மனசு" பாடலில் கர்நாடக இசையையும் மேற்கத்தேய இசையையும் கலந்து குழைத்துக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா. நுட்பமாக ஆழ்ந்து அனுபவிக்கும் போது இப்பாடலில் கொடுத்திருக்கும் ஜிகல் பந்தியை ரொம்பவே ரசிக்கலாம்.
இதோ பாடலைக் கேட்டு ரசியுங்கள்.

12 comments



உன்னை கண்டு நான் ஆட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி



அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எம் அன்புத் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

7 comments


இசையரசி திரையுலகம் நுழைந்தது முதல் பாடிய பாடல்கள் ஏராளம் என்றால்...அந்தப் பாடல்களுக்கு நடித்த நடிகைகளும் ஏராளம். அப்படி ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்காட்டும் முயற்சிதான் இந்தக் கதாநாயகி வரிசை.

முதல் கதாநாயகியாக நாம் பார்க்கப் போவது குஷ்பு. என்னடா...எத்தனையோ மணியான பாடல்களைப் பல கதாநாயகிகளுக்கும் பாடியிருக்கும் போது....குஷ்புவிலா தொடங்குவது என்று கேட்கலாம். குஷ்பு நடிக்க வந்த பொழுது பி.சுசீலா திரையுலகில் பாடிக்கொண்டிருந்தாலும் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியிருந்தும் குஷ்புவிற்கு ஒரு அருமையான பாடலை இசையரசி பாடியிருக்கிறார்.

பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
நஞ்சையும் புஞ்சையும்
இந்தப் பூமியும் சாமியும்
என்றும் நம்கட்சி நம்கட்சி நம்கட்சி

ஆமாம். வருஷம் 16. மாபெரும் வெற்றி பெற்ற படம். பாசில், குஷ்பூ, கார்த்திக் ஆகியோருக்கு நல்லதொரு முன்னேற்றத்தைக் கொடுத்த படம்.

இளையராஜாவின் இசையில் வந்த மிகவும் அருமையானதொரு பாடல். காதல் துளிர்த்த பொழுதில் பாடும் பாடல். பூப்பூக்கும் மாசம் தைமாசம் என்று கேட்கும் போதே ஒரு மகிழ்ச்சி பரவுமே. இதோ இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள். பாடலைப் பார்க்கவும் கேட்கவும் முடியும். கேட்டு ரசியுங்கள். அஞ்சலிதேவிக்கும் சாவித்திரிக்கும் பத்மினிக்கும் கே.ஆர்.விஜயாவிற்கும் பொருந்திய குரல் குஷ்புவிற்கும் அழகாகப் பொருந்துவதைப் பாருங்கள்.

இசையரசியின் தமிழ் உச்சரிப்பு குறித்துச் சொல்லிச் சொல்லி முடியவில்லை. பூமியும் என்று ஒரு சொல் பாட்டில் வருகிறது. bhoomi என்று அதைப் பொதுவாக உச்சரிப்போம். ஆனால் இந்தப் பூமியில் என்று வருகையில் நடுவில் ப் என்ற ஒற்று இருக்கிறது. முறையாகத் தமிழைச் உச்சரித்தால் இந்தப் poomiyum என்று வரும். அதை இசையரசியின் குரலிலும் இந்தப் பாட்டில் கேட்கலாம்.

குஷ்புவிற்கு வேறு எந்தப் பாடலும் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். இது ஒன்றுதான் என்று வைத்துக் கொண்டாலும்.....முத்தான பாடல்.

நன்றி
1. குஷ்பூ படம் - www.bollywoodsagaram.com
2. பூப்பூக்கும் மாசம் பாடல் - விஜயகுமாரின் யூடியூப் பக்கங்கள்

அன்புடன்,
கோ.இராகவன்

2 comments

குருவினே தேடி என் அரசனே தேடி ..


சுசீலா − எல்.ஆர்.ஈஸ்வரி ஜோடிக்குரலில் ஒலித்த பாடல்கள் அனைத்தும் அருமை

அதே போல் 70'களில் மற்றும் 80'களில் சுசீலா − வாணிஜெயராம் இணைந்து பல அருமையான பாடல்களை நமக்கு தந்திருக்கின்றனர்

இந்த ஜோடிக்குரல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் இவர்களது ஜோடிக்குரலில் பல அருமையான பாடல்கள் பாடியிருக்கின்றனர்

அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இது
படம்:எனிக்கும் ஒரு தெவச‌ம்
இசை: ஷ்யாம்
வரிக‌ள்: ஸ்ரீகுமாரன் தம்பி

கிளாசிகல் வகையில் அமைந்த இந்த அருமையான பாடலை கேட்டு மகிழுங்க‌ள்

1 comments



பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிவடைந்தாலும் அதன் சிறப்பு பாடலை இங்கே தருவதில் எனக்கு மகிழ்ச்சியே..

எத்தனையோ பக்தி பாடலை சுசீலா பாடியிருக்கிறார் அதில் இதுவும் ஒரு வகை..

இதோ வேழமுகனின் புகழ் சுசீலாவின் தேன் குரலில்



18 comments

இன்றைக்கு சில்க் ஸ்மிதா அவர்களின் நினைவு நாள். செப்டம்பர் 23. அவர்களை நினைவு கூறும் விதமாக இந்தப் பாட்டை உங்களுக்கு இசையரசி வலைப்பூ வழியாக உங்களுக்குக் கொடுக்கிறோம். ஒலி மட்டுமல்ல. ஒளியும்தான்.

சில்க் ஸ்மிதாவிற்கு எஸ்.ஜானகி நிறைய பாடியிருக்கிறார். எல்.ஆர்.ஈஸ்வரியும் வாணி ஜெயராமும் கூடப் பாடியிருக்கிறார்கள். ஆனால் இசையரசியின் குரலில் தேடினால் இந்த ஒரு பாட்டுதான் எனக்குக் கிடைத்தது. நல்லதொரு பாடல்.

வாழ்க்கை என்ற திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் வெளி வந்த "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" என்ற இனிய பாடல். உடன் பாடியவர் பெயர் ராஜ் சீத்தாராமன் என்று போட்டிருக்கிறார்கள். இவர் பாடிய வேறு பாடல்கள் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.



இந்தப் பாடலை youtubleல் வலையேற்றிய நண்பருக்கு நன்றி.

இசையரசியிடம் கேளுங்கள் சற்றுத் தாமதாமாகிறது.

நண்பர்களே, உங்களிடம் இசையரசியிடம் கேளுங்கள் என்று கேள்விகள் வாங்கினோம். அது சற்றுத் தாமதமாகிறது. இசையரசியின் உடல் நலம், வெளிநாட்டுப் பயணம், ஐதராபாத் பயணம் ஆகிய காரணங்களால் தள்ளிப் போனது. பிறகு நமக்கு உதவி செய்த நண்பர் மும்பைக்கு மாற்றலாகிச் சென்று விட்டார். ஆகையால் வேறொரு நண்பர் வழியாக முயற்சி செய்கிறோம். கண்டிப்பாகச் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி. ஏற்பட்ட இந்த தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் உங்களுக்கு விடைகளைத் தருவோம் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments



மத்தாப்பு சுந்தரி ஆட்டத்த பாருங்கோ!!

நாட்டுப்புற வரிசை − 3



இப்ப வரும் குத்தாட்ட பாடல்களில் என்ன இருக்கிறது

இந்த பாட்டை கேளுங்கள்/பாருங்கள் கிராமத்து ஆட்டத்தை கள்ளப்பார்ட் நடராஜனும் குழுவினரும் தத்ரூபமாக ஆடியிருப்பார்கள்.. அதே போல்
மருதகாசியின் பாடல் வரிகளும், கே.வி.மகாதேவனின் துள்ளல் மெட்டும்
எஸ்.சி.கிருஷ்ணன்,சுசீலாவின் குரலிசையில் அடேயப்பா..

வண்ணக்கிளி திரைப்படம் ஆர்.எஸ்.மனோகரை ஹீரோவாக உயர்த்திய படம். பி.எஸ்.சரோஜா, மைனாவதி, பிரேம் நசீர் என பலரும் நிறைந்த படம்
மாமாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்

திருச்சி லோகனாதன்,சுசீலா பாடும் அடிக்கிற கை தான் அணைக்கும்,
சீர்காழியார் பாடும் மாட்டுக்கார வேலா உன் மாட்ட,
சுசீலா,சீர்காழியார் பாடும் வண்டி உருண்டோட அச்சானி தேவை,
சுசீலா பாடும் சின்னப்பாப்பா எந்தன் செல்ல பாப்பா
மற்றும் சீர்காழியார்,சுசீலா பாடும் ஓடுகிற தண்ணியில
என எல்லாமே ஜனரஞ்சக பாடல்கள்
இருந்தாலும் நம்மை ஆட வைக்கும் சித்தாட கட்டிக்கிட்டு பாடலுக்கு மவுசு அதிகம் தான்







கேட்டு மகிழுங்கள்:

சுசீலா: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
சுசீலா: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்
பெண் குழுவினர்: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
ஆண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
கிருஷ்ணன்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்
குழுவினர்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பாப் பேசும் நல்லவளாம்
கிருஷ்னன்: அஹா ஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓ
சுசீலா: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
பெண் குழுவினர்: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
சுசீலா: ஆஆஆஆ
கிருஷ்ணன்: ஆஆஆஆஆஆ
ஆண் குழுவினர்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
கிருஷ்ணன்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆண் குழுவினர்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆனாலும் பெண் ஏன்றால் அவன் அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
கிருஷ்ணன்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
பெண் குழுவினர்:ஆஆஆஆ
ஆண் குழுவினர்: ஆஆஆ
பெண் குழுவினர்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
ஆண் குழுவினர்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
சுசீலா: அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
கிருஷ்ணன்: இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
பெண் குழுவினர்: அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க
ஆண் குழுவினர்: கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க

பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
ஆண் குழுவினர்: சிங்காரம் பண்ணிக்கிட்டு
பெண் குழுவினர்: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
ஆண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
பெண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
ஆண் குழுவினர்: மொழ நீள சரம் தொடுத்து
பெண் குழுவினர்: வித்தார கள்ளி கழுத்தில்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்


2 comments

நாட்டுப்புற வரிசை − 3

தேன் கூடு நல்ல தேன் கூடு − தூக்கனாங்குருவிக்கூடு


நாட்டுப்புற பாடல்கள் தான் எத்தனை வகை ஏறு பிடிக்க பாட்டு, நாத்து நட பாட்டு, தாலாட்ட பாட்டு என பல வகை அதில் இந்த பாடல் ஒரு வகை

இது ஒரு துள்ளல் வகையான நாட்டுப்புற பாடல்

கவிஞரின் சொந்த தயாரிப்பான வானம்பாடி
மாமாவின் இசையில் எல்லா பாடல்களுமே அற்புத பாடல்கள்
ஆம் ஆண்கவியை வெல்ல வந்த என்ற போட்டி பாடலாகட்டும்,
மனதை உருக்கும் கங்கைக்கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
நெஞ்சை நெகிழ வைக்கும் கடவுள் ஏன் கல்லானான்
ஏட்டில் எழுதி வைத்தேன் என எல்லாமே காலத்தால் அழியா கானங்கள்
இந்த பாடல்களோடு துள்ளிசையாக அமைந்த நாட்டுப்புற பாடல், தான்
தூக்கனாங்குருவிக்கூடு என்ற பாடல்

சும்மா வெளுத்து வாங்கியிருப்பாங்க சுசீலாம்மா
கவிஞர் மட்டும் என்ன குறைச்சலா .. ஆனானப்பட்டா ராஜா கூட மயங்கனும் கேட்டு ..மயங்கமாட்டாரா என்ன?

தூக்கணாங்குருவிக் கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நெனப்பு மனசிலே

பாக்கிறான் பூ முகத்தைப்
பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நெனப்பு தெரியலே

(தூக்கணாங்)

அம்மான் வீட்டுப் பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளிக் கொடுக்க வேண்டாமா
கம்மான் கையில் பொன்னை வாங்கிக்
கட்டிக் கொள்ள வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப் போட்டு
காத்துக் கிடக்க வேண்டாமா

(தூக்கணாங்)

கூரைக் குடிசை நடுவிலே
அந்தப் படுக்கையப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சு
கோலத்தப் போட்டு
ஆற அமர மச்சானோடு
படிக்கணும் பாட்டு
ஆனானப்பட்ட ராஜா கூட
மயங்கணும் கேட்டு...
அத விட்டு...

(தூக்கணாங்)


5 comments

இந்த வலைப்பூவில் சேர்ந்தவுடன் ஜிராவிடம் ஒரு பாட்டை நான் தான் பதிவிடுவேன் என முன்பதிவு செய்துக்கொண்டேன்்.
சிறு வயதில் இருந்தே எனை பெரிதும் கவர்ந்த பாடல் அது!! பாடலை கேட்டாலே ஒரு வித அமைதி நம்மை சுற்றி பரவிக்கொள்ளும்.கதாபாத்திரங்களின் சூழ்நிலைக்கேற்ப கச்சிதமாக படத்தில் பொருந்தும் பாடல் அது.

"புதிய பறவை" எனும் படத்தில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ" எனும் பாடல் தான் அது!!
பாடலின் தொடக்கத்தில் சுசீலாவின் ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் கம்பீரம் பாடல் முடியும் வரை நிறைந்து நிற்கும். பாடலின் படமாக்கிய விதமும்,எடிட்டிங்,லைட்டிங்,நடன அமைப்பு எல்லாமே நம்மை பாடலுடன் ஒன்றச்செய்துவிடும்.

இதனுடன் சிவாஜி மற்றும் சௌகார் ஜானகியின் நடிப்பு வேறு களை கட்டும்!!! சுட்டும் விழி பார்வையில் கண்களை உருட்டி உருட்டி சௌகார் ஜானகி பாடுவதும்,தன்னையே மறந்து (ஜொல்லு விட்டுக்கொண்டு) பாடலையும் பாடகியையும் ஒரு வித திகைப்போடு சிவாஜி ரசிப்பதும்!! ஆஹா!! அற்புதம்!!!
இந்த பாடலில் கம்பீரமும் ஆடம்பரத்தன்மையும் எடுத்து காட்டுவதற்காக பல இசைக்கருவிகளை எம்.எஸ்.விஸ்வநாதன் பயன்படுத்தினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் முயற்சிகள் எதுவும் வீண் போகவில்லை என்பதை தைரியமாக சொலலாம் என்று நினைக்கிறேன்.

இந்த பாடல் ஒரு மேற்கத்திய பாடலால் இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு!!
அதை பற்றிய விஷயங்களை இந்த பதிவிற்கு போய் தெரிந்து கொள்ளுங்கள்!! :-)

இத்தனையும் சொல்லிட்டு பாடல் வரிகள் பற்றி சொல்லாமல் போக முடியுமா??கவியரசர் கண்ணதாசன் எப்பவும் போல கலக்கியிருக்காரு!! என்ன வார்த்தை விளையாட்டு!!

உதாரணத்திற்கு

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)


ஆகா ஆகா!!
இசைக்கும் கதைக்கும் கனக்கச்சிதமாக பொருந்தக்கூடிய வார்த்தையாடல்!!இவரின் வைர வரிகள் என்னை இந்த பாடலை மேலும் மேலும் ரசிக்க வைத்தது!!

சரி சரி!! என் மொக்கையை நிறுத்திக்கொண்டு உங்களை பாடலை கேட்க விடுகிறேன்!! :-)

என்ன ?? உங்களுக்கும் இது ரொம்ப பிடித்தமான பாடலா???
அப்போ பின்னூட்டத்தில் சொல்லிட்டு போலாமே!! :-)



படம் : புதிய பறவை
பாடல் : பார்த்த ஞாபகம் இல்லையோ
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வனாதன்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)

2 comments

தேரு பாக்க வாரீகளா.....

நாட்டுப்புற பாட்டு வரிசை − 2

தேர்த்திருவிழா பாத்திருக்கீங்களா? தென்னாட்டு திருவிழாக்களில் தேர்த்திருவிழா மிகவும் முக்கியமான ஒன்று. இளைஞர்கள் வடம் பிடிக்க, தேர் ஆடி அசைந்து வீதி வீதியாக வரும் அழகும், சாலையின் இரு ஓரங்களிலும் சாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் மக்கள், நீர் மோர் என ஒரே அமர்க்களம் தான் போங்கள்

அப்படி ஒரு அமர்க்களமான பாட்டு தான் இந்த பாட்டு..இசையரசியும், ஏழிசை வேந்தரும் சும்மா பூந்து விளையாடியிருப்பாங்க... மெல்லிசை மன்னரின் இசையும், கண்ணதாசனின் வரிகளும் இந்த பாடலை மேலும் மெருகேற்றுகின்றது... நாட்டுப்புற மெட்டை எவ்வளவு அழகாக பயன்படுத்தியிருக்கிறார் மெல்லிசை மன்னர்.திரையில் சிவாஜியும், பத்மினியும் ஆட்டம் போட்டிருப்பார்கள் பாருங்கள் இன்றைய குத்தாட்டம் எல்லாம் ஒன்னுமில்லை

அதிலும் இசையரசி இனிக்க இனிக்க நெனச்சு... இரவும் பகலும் துடிச்சு.. பாடுவதை கேளுங்கள் அந்த நடுக்கம் கிரமாத்து பெண்ணுக்கே உரிய கூச்சத்தை குரலில் காட்டுவார்..

படம்: இரு துருவம்

தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரைப் பெண்ணே - உன்னைத்
திருடிக்கொண்டு போகட்டுமா
பத்தினிப்பெண்ணே
பத்தினிப் பெண்ணே...

ஊரு பாக்க மணமுடிப்போம்
பொறுத்திரு கண்ணா - அப்போ
ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா..
ஒண்ணுல ஒண்ணா

ஆ..ஆடையைத் தொட்டவன் ஜாடையைத் தொட்டவன்
மேடையைத் தொட்டாண்டி
அள்ளுற அள்ளுல கிள்ளுற கிள்ளுல
வெக்கத்தை விட்டாண்டி

அம்மாடி.. கொஞ்சம் பூச்சூடவா
அத்தாணி முத்தம் நான் போடவா

அம்மானே பெத்த பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்க லோகம்

(தேரு)

எடுத்து எடுத்துக் கொடுக்க
கொடுத்துக் கொடுத்துச் சிரிக்க
அடுத்து அடுத்து நடக்கும் நாளை
நெனச்சு கொள்ளேண்டி..
நெனச்சு கொள்ளேண்டி..

இனிக்க இனிக்க நெனச்சு
இரவும் பகலும் துடிச்சு
படுத்துப் படுத்துப் புரண்ட நாளை
நெனச்சுக் கொள்வேனோ..
நெனச்சுக் கொள்வேனோ..

(தேரு)

சிரிச்சு மயக்கும் ஒருத்தி
செடியில் வெடிச்ச பருத்தி
அணைச்சு ரசிக்கும் நாளை நெனச்சு
ஆட வந்தேண்டி.. ஆட வந்தேண்டி..

நெனைக்கத் தெரிஞ்ச மனசு
ரசிக்க தெரிஞ்ச வயசு
வளைக்கும் சுகத்தை நெனச்சுத்தானே
வந்தேன் முன்னாடி.. வந்தேன் முன்னாடி..

ஐயய்யய்யே.. மறைக்க மறைக்கத் துடிக்கும்..
ஐயய்யய்யே.. நெருங்க நெருங்க நெனைக்கும்..

ஆஹா.. கட்டுற கட்டுல வெட்டுற வெட்டுல
ஊர்வசி கெட்டாடி..
ஆஹா.. மாப்பிள்ளை போடுற மந்திரத்தில் அந்த
இந்திரன் கெட்டாண்டி..

(அம்மாடி)

பாடலை இங்கே கேட்டு மகிழவும்

http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong363.ram

6 comments

நாட்டுப்புற பாட்டு இது நாடறியாத பாட்டு

முன்பு சுசீலா நாட்டுப்புற பாடல்கள் குறைவாக பாடியிருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது அது உண்மையல்ல

அதற்கு உதாரணம் எத்தனையோ பாடல்கள்
50'களில் சித்தாட கட்டிக்கிட்டு தொடங்கி 90'களில் வந்த பாடல்கள் வரை

93' ல் வெளிவந்த அரண்மனைக்கிளி படத்தில் ராஜாவின் ராஜாங்க இசையை யாரும் மறந்திருக்க முடியாது
ஆம் ஜானகியின் வான்மதியே ஓ வான்மதியே
மனோ−மின்மிணியின் அடி பூங்குயிலே பூங்குயிலே பாடல்களுக்கு மத்தியில்
இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை ஆனாலும் இது ஒரு அழகான நாட்டுப்புற பாடல் சடங்கு பற்றி அழகாக பிறைசூடன் எழுத ராஜா சுசீலாவை அழைத்தார் இதை பாட. எந்த பாடல் என்று ஞாபகம் வருகிறதா .. ஆம் " நட்டுவெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா " என்ற அழகான மெட்டுடைய பாடல் அது ..

சுசீலாவின் குரலை கேளுங்கள் என்ன இனிமை என்ன தெளிவு .
குறைந்த வாத்தியங்கள் பயன்படுத்தியிருப்பார் ராஜா காரணம் சுசீலாவின் குரலே பல ஜாலங்களை செய்யுமே.
"மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்" சுசீலா குழைவார்

இதோ பாடல் வரிகள்

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா

மானுக்கு மேலழகு
மயிலுக்குத்தான் வாலழகு
பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்
மொத்தமா அழகிருக்கு தனித்தனியா சொல்லனுமா
அம்மம்மா பேரழக பிரிக்கனுமா
பொத்தித்தான் வைச்சாலும் வந்திடும் பூவாசம்
பொண்ணு தான் ஆளானா நிச்சயம் கல்யாணம்
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா

வான வளைச்சு அந்த வானவில்லை போட்டது போல்
நம்ம வளைச்சு ஒன்னா சேர்த்துப்புட்டா
பூமி செழிச்சதுன்னா பொன்ன அள்ளி கொடுப்பதுபோல்
பொன்னப்போல் சிரிச்சு அவ பார்த்துப்புட்டா
என்னம்மா ஆராய்ச்சி பொன்னு இப்ப பூவாச்சு
அம்மன் கோவில் தேராச்சு ஆடி வரும் நாளாச்சு
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா

பாடலை கேட்டு மகிழுங்கள்

32 comments

இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னால போ
தேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு
நன்னா சொன்னேள் போங்கோ


இந்த மூனையும் கேட்டா ஒங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வரும். பஸ் பாட்டு அது.

சிட்டுக்குருவி. அதுதான் படத்தோட பேரு. அந்தப் படத்துல வர்ர "என் கண்மணி உன் காதலி" அப்படீங்குற பாட்டுதான் நான் சொல்றது. இசையரசியும் பாடும் நிலாவும் பாடிய பாட்டு. ரொம்ப அருமையான காதல் பாட்டு.

இந்தப் பாட்டுல ஒரு சிறப்பு என்ன தெரியுமா? கவுண்டர்...இல்ல இல்ல...Counter முறையில உருவான மொதத் தமிழ்ப் பாட்டு இது. புரியலையா? கீழ பாட்டோட சில வரிகளைக் கொடுத்திருக்கேன். படிங்க அத. அப்புறமா விளக்குறேன்.

என் கண்மனி
உன் காதலி
இளமாங்கனி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன்

நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

நன்னா சொன்னேள் போங்கோ

என் மன்னவன்
உன் காதலன்
எனைப் பார்த்ததும்
ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்

அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ

வரிகளைப் படிச்சீங்கள்ள. இதுல 1, 3, 5, 7ன்னு படிச்சா ஒரு பாட்டு. 2, 4, 6, 8ன்னு படிச்சா இன்னோரு பாட்டு. மேல உள்ள வரிகளையே நான் மாத்திக் குடுக்குறேன் பாருங்க. ரெண்டு பாட்டு கிடைக்கும்.

பாட்டு - 1

என் கண்மனி
இளமாங்கனி
சிரிக்கின்றதேன்

நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ

நன்னா சொன்னேள் போங்கோ

என் மன்னவன்
எனைப் பார்த்ததும்
கதை சொல்கிறான்

அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ



பாட்டு - 2

உன் காதலி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன்

நீ நகைச்சுவை மன்னனில்லையோ

நன்னா சொன்னேள் போங்கோ

உன் காதலன்
ஓராயிரம்
கதை சொல்கிறான்

நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ


மொத்தமாக் கேட்டாலும் ஒரு பாட்டு. ஆகா ஒன்னுக்குள்ள மூனு. இதப் படம் பிடிக்கிறப்போ பாட்டோட சிறப்பு சிதையாமப் படம் பிடிச்சிருக்காங்க. இந்தச் சுட்டிக்குப் போங்க. பாட்டப் பாக்கலாம். இப்பிடியொரு பாட்டை எழுதுனது யார் தெரியுமா? வேற யாரு? நம்ம வாலிதான். அவருடைய கவிதை வாளி எப்பொழுதும் ஆகாது காலி.

இந்தப் பாட்டுக்கு இளையராஜா இசை. அருமையான இசை. கிட்டத்தட்ட இதே மாதிரி முயற்சி நடிகர் திலகம் நடிச்ச இமயம் படத்துலயும் உண்டு. கங்கை யமுனை இங்குதான் சங்கமம் அப்படீங்குற பாட்டு. மெல்லிசை மன்னர் கவியரசர் கூட்டணி. ஏசுதாசும் வாணி ஜெயராமும் பாடியது. ஆனா அங்க வேற மாதிரி. ஆண் ஒரு வரி...பெண் ஒரு வரி பாடுறதில்லை. ஒரு வரியவே பிச்சி....ஆண் ஒரு சொல்...பெண் ஒரு சொல்னு பாடுறது. நம்ம தமிழுக்குக் கிடைச்ச பெரிய இசையமைப்பாளர்கள் நெறைய செஞ்சிருக்காங்க. அவங்க செஞ்சதப் புரிஞ்சு அனுபவிக்கிற அருமை நமக்குத்தான் இல்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments

ஒரே பாடல் மொழிகள் வேறு

தாழையாம் பூ முடிச்சு என்ற பாடல் எல்லோருக்கும் நினைவிருக்கும்
லீலாவும்,செளந்தரராஜனும் பாடியது
ஆம் பாகப்பிரிவிணை திரையில் சிவாஜியும்,சரோஜாதேவியும் பாடுவதாக அமைந்த பாடல்


2.அதே படம் தெலுங்கில் சாவித்திரி,என்.டி.ஆர் நடிக்க வெளிவந்தது
தமிழில் ஒலித்த பாடலை தெலுங்கில் சுசீலாவும்,கண்டசாலாவும் பாட‌
இதோ இந்த இனிமையான பாடலை பார்த்து மகிழுங்கள்



3. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
பாகப்பிரிவிணையில் இந்த பாடலுக்கு தனி சிறப்புண்டு
தமிழில் இந்த படத்தில் சுசீலா பாடிய ஒரே பாடல் ஆனால் மிகவும் பிரபலமான பாடலும் இதுவே
கவியரசரின் வரிகளும்,மெல்லிசை மன்னர்களின் இசையும், இசையரசியின் குரலும் அடேயப்பா
கேளுங்கள் கேட்டு மெய் மறந்து போங்கள்


4. இதே பாடலை தெலுங்கிலும் கேளுங்கள்
குரல் : சுசீலா


5.என்னை விட்டு ஓடிப்போக முடியுமா
குமுதம் திரையில் ஒலித்த இந்த பாடல் சீர்காழியார்,சுசீலா குரல்களில் இஒரு அழகான பாடல்
பாடலாசிரியர் மருதகாசிக்கு தங்க காப்பே போடலாம்
அவ்வளவு அருமையான வரிகள்
(எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே...அதுவல்லவோ காதல்)
மகாதேவன் அவர்களின் அற்புத இசையும் இந்த பாடலை அருமையான பாடலாக்கியது என்பது 100% உண்மை


5.இதோ அதே பாடல் தெலுங்கில்
பார்த்து கேட்டு மகிழுங்கள்


இது போல வேறு பாடல்கள் அடுத்த பகுதியில்

3 comments

ஹம்மிங் பல விதம்
பல பாடல்களில் ஆண் ஹம்மிங் கொடுக்க பெண் பாடுவது போலவும்
இல்லையேல் பெண் ஹம்மிங் கொடுக்க ஆண் பாடுவது போலவும் அமைந்த தமிழ் திரைப்பாடல்கள் ஏராளம்

ஹம்மிங் என்றதுமே நமக்கு சட்டென ஞாபகம் வரும் குரல் எல்.ஆர்.ஈஸ்வரி தான்
ஒரு விதமான husky ஹம்மிங் கொடுக்க இவரால் தான் முடியும்

பின்னர் வந்த வசந்தா, சசிரேகா என பலர் ஹம்மிங் முத்திரை பெற்றனர்

இருந்தாலும் இசையரசி சுசீலாம்மாவின் ஹம்மிங் தனி ரகம்..
பாடலின் வரிகளை ஆண் பாடகர் எவ்வளவு உணர்ந்து பாடினாரோ அதே பாவம் இவரது ஹம்மிங்கிற்கு உண்டு
ஆம் சுசீலா ஹம்மிங் செய்த பல பாடல்கள் உண்டு
உதாரணமாக வெள்ளிக் கின்னம் தான்

ஆனால் இங்கே நாம் பேசப்போவது வேறு சில பாடல்களை பற்றி

சுசீலாம்மா தமிழ் தெலுங்கில் நிறைய பாடியிருந்தாலும், கன்னடம் மலையாளம் மொழிகளில் சிறந்த பாடல்களை சுசீலாம்மா பாடியிருக்கிறார்

அப்படி சுசீலாம்மா ஹம்மிங் செய்த மிகவும் சிறப்பான வேற்று மொழிப்பாடல்களையும், தமிழ் பாடல்களையும் பார்ப்போம்

1. மொழி: கன்னடம்
படம்: சானுக்யா
இசை: சத்யம்
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா
பாடல் : மோகினி நவ மோகினி
இந்த பாடலின் தொடக்கமே ஒரு அழகு. சுசீலாவின் துவக்க‌ ஹம்மிங்கை கேளுங்கள் மெய் மறந்து போவீர்கள் பின்னர் பாலுவின் குழைவு அதற்கேற்றார் போல் சுசீலா குழைந்து செய்யும் ஹம்மிங்கும் இந்த பாடலை கன்னட மக்கள் மத்தியின் இன்றும் மறக்க முடியாத பாடலாக்கியிருக்கிறது என்றால் இந்த பாடலின் கம்பீரத்தை என்னவென்று சொல்வது

பாடலை இங்கே கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்

2. மொழி : தெலுங்கு
படம்: ஜெகதீகவீருனி கதா
இசை: பெண்டியாலா நாகேஸ்வரராவ்
குரல்கள் : கண்டசாலா,சுசீலா

ஐனதேமோ ஐனதி ..
என்ற இந்த பாடலின் அழகான தாளக்கட்டும், சுசீலாவின்ஹம்மிங்கும்
கண்டசாலா மாஸ்டரின் குரலும்
சரோஜாதேவியின் அழகும்.. என்ன சொல்வது...
பார்த்து மகிழுங்கள்

பாடலை இங்கே பார்த்து மகிழுங்கள்


3. மொழி: கன்னடம்
படம்: அமர சில்பி ஜக்கான்னாச்சாரி
இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
குரல்கள்: பீ.பி.ஸ்ரீனிவாஸ்,சுசீலா
பாடல் : நில்லு நீ நில்லு நீ நீலவேணி

பாடலின் ஸ்ரீனிவாஸ் செய்யும் சங்கதிகளை சுசீலா ஹம்மிங்க்கில் செய்துவிடுவார்
அதுவும் ஒலிதுபா நொலிதுபா என்று ஸ்ரீனிவாஸ் பாட சுசீலாவின் ஹம்மிங்க்கும் இணைய ஆஹா ..
அவ்வளவு அழகு இந்த பாடல்
பாடல்காட்சியில் தோன்றியவர்கள் சரோஜாதேவி,கல்யாண்குமார்

4. இதே பாடல் தெலுங்கிலும் வந்தது
குரல்கள் கண்டசாலா,சுசீலா
இதோ அதையும் கேட்டு மகிழுங்கள்


5.யேசுதாஸ் பாட சுசீலா செய்யும் ஹம்மிங் வித்தைகள் இதோ
குங்குமத்திலகம் தெலுங்கு திரைப்படத்தில்
பாடல் ஆலனகா பாலனகா
பாடலை கேளுங்கள்
http://psusheela.org/audio/ra/telugu/all/aalanaga.ram

6. தமிழிலும் சுசீலா எத்தனையோ ஹம்மிங் செய்திருந்தாலும்
வெள்ளிக்கின்னம் தான் பாடலுக்கு தனி சிறப்பு
இதே படத்தில் சுசீலா பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஓடி வாவிற்கு தேசிய விருது கிடைத்தது
இந்த பாடலில் ஹம்மிங் மட்டுமே செய்து டி.எம்.எஸ்ஸுடன் ஈடாக பாடலில் தெரிவார் சுசீலா

பாடல் இதோ


பாடல்களை கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்

ராஜ்

7 comments

பாடல்கள் பல விதம் உண்டு.அதில் ஒரு வகை என்னவென்றால், பாடல் ஒலிக்க ஆரம்பித்த உடன் உலகத்தில் உள்ள அனைத்து ஒலிகளும் அடங்கி போனாற்போல் இருக்கும். நாம் எந்த மன நிலையில் இருந்தாலும் பாடலின் இசையும் பாடகரின் குரலும் நம்மை சூழ்ந்துக்கொண்டு நம்மை தனி உலகிற்கு அழைத்து சென்றுவிடும். பாடலை கேட்டு முடிக்கும் போது நமது மனது ஒரு விதமான அமைதியான சூழலுக்கு வந்து விடும். மின்னலே படத்தில் வரும் "வசீகரா" பாடல் இந்த விதமான பாடலுக்கு ஒரு நல்ல உதாரணம்.

ஆனால் எனக்கு இது போன்று ஒரு உணர்வை முதன் முதலில் தந்து ,நான் இசையை ரசிக்க ஆரம்பித்து அதற்கு அடிமையாக வைத்த ஒரு பாடலை தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.
போன பதிவு போட்ட போது தோன்றியது, அதை எழுதுவதற்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. கண்டு பிடித்து விட்டீர்களா?? ஆமாம், நான் சொல்வது "கேளடி கண்மனி" படத்தில் வரும் "கற்பூர பொம்மை ஒன்று" பாடல் தான். :-)

இசையின்பத்தில் இசைக்கருவிகள் பற்றியெல்லாம் பதிவு போடும் போது,ஒவ்வொரு இசைக்கருவி எப்படி நமது மனதை பாடலின் உணர்வோடு உறவாட வைத்துவிடுகின்றது என எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த பாடலை பொருத்த வரை அந்த வேலையை இசையரசியின் அழகான குரல் செய்து விடுகிறது. பாடலின் ஆரம்பத்தில் அவர் ஹம் செய்யும் பொழுதே,நம் மனது மகுடிக்கு மயங்கிய நாகம் போல் பாடலுக்கு முன் கிறங்கிப்போய் விடும். பிறகு பாடல் முழுதும் இனிமையான குரல்,வயலின்.வீணை,புல்லாங்குழல் ஆகிய வாத்தியங்களின் தெய்வீக இசை மற்றும் மு.மேத்தாவின் மனதை வருடும் வரிகள் என பாடல் முழுமையாக ஒரு உணர்ச்சி கடலில் நம்மை மூழ்கடித்து விடும்.
அதுவும் கடைசியில் "தாய் அன்புக்கே ஈடேதம்மா,ஆகாயம் கூட அது போறாது. தாய் போல யார் வந்தாலுமே,உன் தாயை போலே அது ஆகாது" என்று சொல்லும் போது நான் அப்படியே உருகி விடுவேன்.
பாடலை கேட்டு முடித்த பின் ஒரு வித உணர்ச்சி வசப்பட்ட மன நிலையிலோ ,கண்களில் தண்ணீர் எட்டி பார்ப்பது போலோ இருந்தால் "என்ன ஆச்சு எனக்கு?? ஏன் ஒரு பாட்டுக்கு இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன்" என்று உங்களையே கடிந்து கொள்ளாதீர்கள்.
உங்களையும் என்னையும் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் இங்கு உண்டு.
நம்மில் எந்த குறையும் இல்லை. எல்லாம் இந்த பாட்டுக்கு உள்ள சிறப்பு!! :-)


Ilayaraja - Keladi...


படம் : கேளடி கண்மனி
பாடல் : கற்பூர பொம்மை ஒன்று
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : மு.மேத்தா

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

5 comments

சமீபத்தில் குமுதம் வாரயிதழில் கேள்விபதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. அதில் ஒரு கேள்வியில் அவருக்குப் பிடித்த பாடகியான இசையரசி பி.சுசீலா அவர்களைப் பற்றிச் சொல்லும்படிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் கொடுத்த விடை இங்கே.



இதோ வைரமுத்து எழுதி இசையரசி பாடிய ஒரு பாடல். வி.எஸ்.நரசிம்மன் இசையில் அச்சமில்லல அச்சமில்லை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மலேசியா வாசுதேவன் உடன் பாடிய ஓடுகிற தண்ணியில என்ற அழகான பாடல்.

அன்புடன்,
கோ.இராகவன்

19 comments




ஆம். வலைப்பூ வரலாற்றில் முதன்முறையாக ஒரு முயற்சி. எத்தனையோ பேட்டிகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் இங்கே பேட்டி எடுக்கப் போவதே நீங்கள்தான். யாரை? இசையரசி பி.சுசீலா அவர்களைத்தான். இசையரசியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை என்னுடைய gragavan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கேள்விகளுக்கு சென்னையிலிருக்கும் இசையரசியிடமிருந்து பதில் பெற்றுத் தரப்படும். கேள்வி என்றில்லை. இசையரசியிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்திகளையும் வாழ்த்துகளையும் அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்காகவும் வாழ்த்துகளுக்காகவும் இசையரசி காத்துக்கொண்டிருக்கிறார். இசையரசிக்கு வலைப்பூ அன்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி பல.

கேள்விகளை அனுப்பக் கடைசி நாள் ஜூலை 17.

எப்படிப் பட்ட கேள்விகள் நீங்கள் அனுப்ப வேண்டும் என்று நான் பாடம் எடுக்கப் போவதில்லை. நல்ல கேள்விகள் உங்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.

கேள்விகளை யுனிகோடு தமிழிலோ, ஆங்கிலத்திலோ அனுப்பலாம். உடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் வலைப்பூ முகவரியையும் குறிப்பிடவும்.

நமக்காக இசையரசியிடம் பேசி உதவ ஒத்துக்கொண்ட ராஜகோபால் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி.

இதோ உங்களுக்காக ஒரு இனிய பாடல்.


உங்கள் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்க்கும்,
கோ.இராகவன்

13 comments

இன்றைக்கு வேறு ஒரு பாட்டு பதிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் இசை இன்பத்தில் சாரங்கி பதிவில் அண்ணாத்த ஜிரா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாரு. அதை பாத்துட்டு இன்னைக்கு கர்ணன் படத்தோட பாட்டு எல்லாத்தையும் திரும்ப பார்த்தேன்.
அப்படி பாக்கும் போது தான் இந்த பாட்டை திரும்பவும் ரசிச்சு கேட்டேன்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

அரண்மனையில் ராணியாரால் பாடப்படும் பாடல் என்பதால் பாடலின் ஒரு வித மிடுக்கு நிறம்பியிருக்கும். அது பாடல் படமாக்கப்பட்ட விதத்திலேயும் சரி,பாடலின் இசை அமைப்பிலும் சரி. விசுவனாதன் ராமமூர்த்தியின் இனிமையான மெலடி மெட்டில் சுசீலாவின் குரல் பாலில் தேன் குழைத்தது போல். அவருக்கே உரித்தான மென்மையான மற்றும் கம்பீரமான குரலில் அசத்தியிருப்பார்.
ஜிரா அண்ணா அந்த பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது போல இந்த படத்தின் பாடல் எல்லாவற்றிலும் சாரங்கி மிக அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாட்டிலேயும் நடு நடுவே சாரங்கியின் இசையை கேட்கப்பெறலாம். படம் வட இந்தியாவில் அமையப்பெற்றிருப்பதால் (படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தது) அந்த பாதிப்பை நாம் உணர்வதற்காக சிரத்தை எடுத்து இதனை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் விசுவனாதன் மற்றும் ராமமூர்த்தி.இந்த படத்திற்கு முன் இந்த அளவுக்கு சாரங்கியை வேறு எந்த படத்திலேயும் உபயோகித்திருப்பார்களா என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் விசுவனாதன் ராமமூர்த்தி, குறிப்பாக எம்.எஸ்.வியின் பங்களிப்பு கொஞ்சநஞ்சமில்லை. இப்பொழுது நாம் கேட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மெல்லிசை பாணியை ஆரம்பித்து வைத்தவர்களே அவர்கள் தான்.

பாடலின் கரு ஒன்றும் புதிதல்ல. வேலை பளு காரணமாக தன்னை சரியாக தலைவன் கவனிக்க மாட்டேன் என்கிறான் என்று தோழியிடம் முறையிடுகிறாள் தலைவி. முதல்வன் படத்தில் கூட சமீபத்தில் இது போன்ற ஒரு பாட்டு வந்ததே. எந்த இடம் போனாலும்,எந்த காலம் ஆனாலும் மனிதனின் அடிப்படை தேவைகளும் பிரச்சினைகளும் மாறாது என்று ஜிராவிடம் ஒரு முறை கதைத்தது தான் ஞாபகம் வருகிறது.

சரி நீங்கள் பாட்டை ரசியுங்கள்!! வேறொரு அழகான தமிழ் பாடலுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்!!
வரட்டா??




படம் : கர்ணன்
இசை : விசுவனாதன் ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்

என்னுயிர் தோழி கேளொரு சேதி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி
தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான்
தலைவன் என்றாயே................. தோழி..

(என்னுயிர்)

அரண்மனை அறிவான் அரியணை அறிவான்
அந்தபுரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ர வழக்கை தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்

(என்னுயிர்)

இன்றேனும் அவன் எனை நினைவானோ
இளமையை காக்க துணை வருவானோ
நன்று ! தோழி நீ தூது செல்வாயோ
நங்கையின் துயர சேதி சொல்வாயோ

(என்னுயிர்)

13 comments

தமிழ்ல இருக்கு. மலையாளத்துல இருக்கு. வங்காளத்துலயும் இருக்கு. ஆமா. இன்னனக்குப் பாக்கப் போற...அட கேக்கப் போற பாட்டுதான். தமிழ் மலையாளம் புரியுது. மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இங்கயும் அங்கயும் கொஞ்சம் மாத்தி மாத்திப் போட்டிருக்காங்க. அதுனால இருக்கலாம். ஆனா வங்காளம்?

சலீல் சௌத்ரி பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. அவரு ஒரு வங்காள இசையமைப்பாளர். இந்தி மலையாளம்னு நெறையப் படத்துக்கு இசையமைச்சிருக்காரு. மலையாளத்துல ரொம்பப் பிரபலமான கரையினக்கர போனோரே பாட்டு மானச மைனே வரு பாட்டுக்கெல்லாம் இவர்தான் இசை. நல்ல இசையமைப்பாளர்.

செம்மீன் படம் இவரைக் கேரளத்தில் பிரபலப்படுத்தியது. நிறையப் படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. வாணி ஜெயராமை மலையாளத்தில் அறிமுகப் படுத்தியதே இவர்தான். இவர் தமிழ்ல ரெண்டு மூனு படத்துக்கு இசையமைச்சிருக்காரு. குறிப்பிட்டுச் சொல்லப் பட வேண்டிய படம் அழியாத கோலங்கள்.

அந்தப் படத்துல உள்ள காலத்தால் அழியாத காதற்பாட்டுதான் இந்தப் பதிவுல பாக்கப் போறோம். ஆமா. ஜெயச்சந்திரன் கூடச் சேந்து இசையரசி பாடிய "பூவண்ணம் போல மின்னும்" பாட்டுதான் அது. அழகிய இனிய காதற் பாட்டு. கேட்டுப் பாருங்க.



இதே மெட்டை மலையாளத்துலயும் வங்காளத்துலயும் சலீல் சௌத்ரி பயன்படுத்தீருக்காரு. மலையாளத்துல ஏதோ ஒரு ஸ்வப்னம் அப்படீன்னு ஒரு படம் 1977ல வந்தது. அந்தப் படத்துல இதே மெட்டு யேசுதாசைப் பாட வெச்சு எடுத்திருக்காரு. அத இங்க கேளுங்க. மலையாளத்துலதான் இந்த மெட்டை முதல்ல போட்டிருக்கனும். ஏன்னா அழியாத கோலங்கள் 1978ல வந்தது.

அத்தோட விட்டாரா...இந்த மெட்டு மேற்கு வங்காளம் வரைக்கும் போயிருக்கு. அந்தர்காட் அப்படீங்குற படத்துல பயன்படுத்தீருக்காரு. 1980ல வந்த அந்தப் படத்துல கிஷோர்குமாரும் லதா மங்கேஷ்கரும் பாடியத இங்க கேளுங்க.

இப்படி மூன்று மொழியில வந்த பாட்ட சோகமான மெட்டுல இசையரசி குரல்ல கேக்கனுமா? இதோ இங்கே.

மூன்று மொழிகள்ளயும் பாட்டைக் கேட்டீங்க. இப்ப கருத்துகளைக் கொட்டுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

7 comments

P.சுசீலாவின் பாடல்களில் அவ்வளவாக நாட்டுபுற மெட்டுகள் அமைந்ததில்லை என்று வெகு நாட்களாக எனக்கு ஒரு எண்ணம் இருந்து வந்தது. சுசீலா என்றாலே மேல் தட்டு மக்களின் பாடகி என்றுதான் நினைத்து வந்தேன். அவரின் குரலில் உள்ள வளமையும் செரிவும் கேட்டாலே ஏதோ ஒரு பெரிய நகரில் ஒரு ஏ.சி அறையில் நாகரிக பெண்மனி பாடும் காட்சி தான் மனத்திறையில் தோன்றும்.ஆனால் அது எவ்வளவு தவறு என்று எனக்கு உணர்த்திய பாடல் இது. கிராமத்து ராஜா இளையராஜாவின் அருமையான நாட்டுப்புற மெட்டில் அமைந்த அழகான தமிழ் பாடல் இது. பாடலின் தாளமும் இசை அரசியின் பாவமும்,இனிமையான குரலும் உங்களை வேறு ஏதோ உலகிற்கு எடுத்து சென்றுவிடும். உங்களிடம் நல்ல ஹெட்போன் இருந்தால் அதை அணிந்து கொண்டு அமைதியான ஒரு சூழலில் கேட்டு பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு புரியும்!! :-)

ஆசையிலே பாத்தி கட்டி : படம் - எங்க ஊரு காவக்காரன் : இளையராஜா



Get this widget | Share | Track details

6 comments

மாலை நேரம்,குயில்கள் கூவும் அழகான் ஒலி மெல்லிய குளிர் காற்றோடு கலந்து வர,தேவதை போன்ற பெண் ஒருத்தி தன் காதலனை பற்றி பாடுகிறாள். மிக இனிமையான மெல்லிசை,கவியரசர் கண்ணதாசனின் காலத்தை வெல்லும் வரிகள்,கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் அழகான முகமும்,அளவான நடிப்பும்.

இதனுடன் இசையரசியின் தெய்வீகக்குரல்!!!ஆஹா!!! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் மனதில் தோன்றும் அமைதியை வார்த்தைகளால் கூற முடியாது. அதே அமைதி உங்கள் மனங்களிலும் நிறம்பட்டும் என்ற வாழ்த்துக்களுடன் இந்த பதிவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் . பாடலை ஒரு முறை கண்டு களித்துவிட்டு,மற்றொருமுறை பாடலை கேட்டுக்கொண்டே வரிகளை படிக்க பாருங்கள். கவி புனைவது மட்டுமில்லாமல் இசைக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய பாடலகள் புனைவது திரை இசையில் மிக முக்கியம்.அந்த கலையில் கவியரசர் எந்த அளவுக்கு தேர்ந்திருந்தார் என்பதற்கு இந்த பாடல் இன்னொரு சான்று.
இந்த பாட்டில்

"அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்"
"இரு விழியாலே மாலையிட்டான்"
"யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே"

போன்ற வரிகள் நான் மிகவும் ரசித்தவை.
இனிய இசையில் மயங்கி எழுக!! :-)



படம் - பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராம்முர்த்தி
பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

நன்றி: http://www.tamilnation.org/literature/kannadasan/aalayamani.htm

22 comments

இது நடந்தது எம்.ஜி.ஆர் தீவிர எதிரணி அரசியலுக்கு வருவதற்கு முன்னால். அப்பொழுது கருணாநிதி முதல்வராக இருந்தார். அவருக்கு ஒரு விருப்பம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தால் எப்படி இருக்கும் என்றுதான். தேசியகீதத்திற்கு இசையமைத்துப் பாடுகையில் தமிழ்த்தாய்க்கு மட்டும் இசைமாலை கூடாதா என்ன?

உடனடியாக கருணாநிதியின் நினைவிற்கு வந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். உண்மையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைக்கப் பொருத்தமானவர்தான். கருணாநிதி எழுதிய பாடல்களுக்குத் திரைப்படத்தில் இசையமைத்திருக்கிறார் அவர். ஒரு முறை ஏதோ ஒரு பாடலை எழுதி அனுப்ப....வசன நடையாக இருக்கிறது என்று சொல்லி மெல்லிசை மன்னர் திருப்பி அனுப்பி விட்டாராம். அடுத்து இன்னொன்று எழுது "வசன நடையாக இருந்தாலும் இசையமைக்கவும்" என்று குறிப்பும் அனுப்பினாராம். எந்த பாடல் அது என்று நினைவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தால் யாரைப் பாட வைக்க வேண்டும் என்று மெல்லிசை மன்னர் பெரிதும் யோசித்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். அவருடைய சிறப்பான கூட்டணி ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனும் இசையரசி பி.சுசீலாவும்தானே. அவர்களை வைத்துப் பாடலைப் பதிவு செய்து விட்டார்.

அந்தப் பாடலைத்தான் இன்றும் நாம் பள்ளிகளில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இனியும் கேட்போம். ஆக தமிழகம் இருக்கும் வரைக்கும்....தமிழ் இருக்கும் வரைக்கும்....மெல்லிசை மன்னரும், ஏழிசை வேந்தரும், இசையரசியும், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த கலைஞரும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இந்தப் பாடலை, இசையரசியின் வலைப்பூவில் உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.



அன்புடன்,
கோ.இராகவன்

11 comments




இந்தப் பாடல் சற்று அபூர்வமானது என்றுதான் சொல்ல வேண்டும். இளையராஜாவின் இசையில் தாய்மூகாம்பிகை என்ற படத்தில் இடம் பெற்றது. இது ஒரு போட்டிப் பாட்டு. அம்மனே வந்து பாடுவதாக அமைந்த பாடல். அப்பொழுது பாலில் மருந்து கலந்து கொடுத்து விடுகிறார்கள். அம்மன் ஊமை மாதிரி நடிக்க...ஊமையான அம்மன் பக்தைக்குக் குரல் வந்து விடுகிறது. இப்படிப் போகிறது பாடல்.

அம்மனாக கே.ஆர்.விஜயா. அவருக்குப் பாடியது இசையரசி. அம்மன் அருளால் குரல் எடுத்துப் பாடுவது சரிதா. அவருக்குக் குரல் இசைக்குயில் எஸ்.ஜானகி. போட்டிக்கு வந்திருக்கும் மனோரமாவிற்கு எஸ்.ராஜேஸ்வரி. கேட்டுப் பாருங்கள். சிறப்பான பாட்டு.

இசையரசி எந்நாளும் நீயே
உனக்கொடு இணையாரம்மா!




அன்புடன்,
கோ.இராகவன்

13 comments

இசையரசி எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கின்றார்கள். கந்தன் மீதும் கண்ணன் மீதும் அம்மன் மீதும் ஈசன் மீதும்..எத்தனையெத்தனை பாடல்கள். முதற்பாடலாக எனக்குப் பிடித்த முருகன் பாடலை நான் கொடுக்க விரும்புகிறேன்.

கந்தன் கருணை. படத்தின் பெயர் மட்டுமல்ல..படத்தின் இசையமைப்பாளருக்குக் கிடைத்ததும். ஆமாம். இந்தப் படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார். அவர்தான் கே.வி.மகாதேவன்.

சொல்லச் சொல்ல இனிக்குதடா என்ற இந்த அருமையான பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.



அன்புடன்,
கோ.இராகவன்

22 comments




இசையரசி என்றால் அது என்னைப் பொருத்த வரையில் பி.சுசீலா அவர்கள்தான். அவருடைய குரலைக் கேட்டுதான் இசையின் இன்பத்தைப் பெரிதும் உணர்ந்திருக்கிறேன். அந்த அன்பிற்குச் செலுத்தும் சிறிய பரிசுதான் இந்த வலைப்பூ. அவரது பாடல்களை மக்களுக்கு வலைப்பூ வழியாக எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி. இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்