பொன்னழகு ‍ பெண்ணழகு‍





திரையிசையில் எத்தனையோ குரல்கள் ஒலித்திருந்தாலும்
பெண்மையின் குரலாக ஆம் பெண்மையின் மென்மை, கோபம் என எல்லாவகையாகவும் ஒலித்த குரல் இசையரசியுனுடைய குரல்

இசையரசியும் எல்.ஆர். ஈஸ்வரியும் எத்தனையோ (female dueட்ச்) அதாவது
இரு பெண்களுக்கு பாடியிருக்கிறார்கள்
இங்கே ஆண்வேடமிட்டவருக்கு எல்.ஆர்.ஈஸ்வரியும், மஞ்சுளாவிற்கு இசையரசியும் குரல்கொடுக்க ஒரு அழகான மேடை நாடகம் அரங்கேறுகிறது

ரிக்ஷாக்காரனில் அதிகம் பிரபலமடையாத பாடல் ..
வாலியின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும் அற்புதம்

எம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே எம்.எஸ்.வி அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல .. ஒவ்வொரு பாடலும் கடலில் மூழ்கி எடுத்த முத்து போல விலைமதிப்பற்றது... இதிலும் இந்த பாடலை கேளுங்கள் .. அடேயப்பா மேடை பாடலில் கூட இத்தனை விஷயங்களை புகுத்த முடியும் என நிரூபித்திருப்பார்..

இசையரசியின் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் பொன்னழகு பெண்மையின் அழகு

பாடலை பார்த்து மகிழுங்கள்

0 comments:

Post a Comment