Showing posts with label சுசீலா p.susheela p.suseela. Show all posts
Showing posts with label சுசீலா p.susheela p.suseela. Show all posts
1 comments

என் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும்

இசையரசியும் ஏ.எம்.ராஜா பாடிய பூலோக ரம்பை

பாடல்



0 comments



வெண் தாமரை வாணி

மன்னவன் வந்தானடி >> நாளை என்ற வேளை பார்த்து >> நவராத்திரி சுபராத்திரி >> காதலெனும் வடிவம் கண்டேன் >> கண்ணா கருமை கண்ணா >> லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் >> பாலிருக்கும் பழமிருக்கும் >> ஓராயிரம் நாடகம் >> மாலை பொழுதின் மயக்கத்திலே >> வசந்ததில் ஓர் நாள்.

Clik here for download

இசையன்பர்களே வானொலி நேயர்களின் ரசனைகள் தான் எவ்வேறு வித்தியாசமானவை மேலே உள்ள பாடல்கள் அனைத்தும் பல முறை கேட்ட பாடல்கள் தான். ஏன் நானே இந்த தளத்திலும், தேன்கிண்ணத்திலும் தொகுப்புகளாக பதிந்துள்ளேன். சுசீல்லாம்மாவின் குரலில் வெளிவந்த இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் ஓவ்வொருமுறையும் நம் பழைய நினவுகளை இனிமை என்ற சங்கிலியால் கட்டி இழுத்து கொண்டு வெளியில் போட்டு விடுகின்றன பாடல்களின் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்க்கு நாம் படாத பாடு படுகிறோம். அந்த வகையில் நேற்று ஒரு சுசில்லாம்மாவின் அருமையான ஒலித்தொகுப்பு வானொலியில் கேட்டேன் ஒரு நேயரின் அற்புதமான ரசனை கொண்ட தொகுப்பு இவை. உருவாக்கியவர் குறிச்சியில் வசிக்கும் திருமதி.ரேவதி தியாரகராஜன் அவர்கள் சுசீலாம்மாவின் குரலிற்க்கு தன் கிண்கிணி மணிகளால் தோரணம் கட்டி தன் அற்புத ரசனைப் பூக்களால் எவ்வாறு அர்ச்சனை செய்கிறார் நீங்களூம் கேளூங்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அற்புதமாக வழக்கம் போல் நிறுத்தி நிதானமாக ஆக்கத்தின் வரிகளை அச்சரம் பிசகாமல் பேசி தொகுத்து
வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள். இணைய இசை நேயர்களின் அன்பு உள்ளங்களை உருண்டையாக உருட்டி தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சுசில்லாம்மவுக்கும் அவரின் குரலை அனுஅனுவாக ரசித்த திருமதி.ரேவதி தியாகராஜன் அவர்களூக்கும், நான் கேட்ட இந்த ஒலித்தொகுப்பை உஙகளுக்கும் வழங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய வானவில் பண்பலைக்கும், சுந்தர தமிழில் சொக்க வைத்த சுந்த்ரராஜன் அவர்களூக்கும் சூசீலாம்மா தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் பெருமையடைகிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


பாலுஜிக்கு சாதனையாளர் விருது வழங்கி மரியாதை செய்த வெள்ளைக்குயில் சுசீலாம்மா அவர்களின் ட்ரஸ்டி நடத்திய நிகழ்ச்சியின் புகைப்பட ஆல்பத்தை இங்கே உங்களூக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன் அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாக சுசீலாம்மாவிற்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாகிளீட்ஸ் இணையத்தில் ஏற்றிய அந்த தளத்திற்க்கும் நன்றி. இங்கே கிளிக் செய்து பார்த்து மகிழுங்கள்.

9 comments

இவரை வில்லியாகத்தான் நிறையப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அல்லது சிங்காரிச் சரக்கு மாதிரி பாடல்களில் கவர்ச்சியாகத்தான் பார்த்திருப்பீர்கள். ஆம். நடிகை ஒய்.விஜயாவைத்தான் சொல்கிறேன்.




சில நடிகைகள் வில்லிகளாகவே வாழ்ந்து விடுகிறார்கள். சி.கே.சரஸ்வதிக்குப் பிறகு ஒய்.விஜயாவிற்கு அந்த வாய்ப்பு. ஆனாலும் இவருக்கும் ஒரு இனிய பாடலும் பாத்திரமும் ஒரு சில படங்களில் கிடைத்திருக்கின்றன.

அப்படியொரு படமே "அவர் எனக்கே சொந்தம்". ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் பெரிய பாத்திரங்கள் ஏற்று நடித்த படத்தில் கைம்பெண் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஒய்.விஜயா. ஒரு குழந்தைக்குத் தாய்ப் பாத்திரத்தில் நடித்த அவருக்கு இளையராஜாவின் இசையில் ஒரு இனிய பாடலும் கூட உண்டு. ஆம். இசையரசியின் அமுதக் குரலில் "தேனில் ஆடும் ரோஜா" என்று பாடிக் குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறார். இந்த இனிய பாடலைக் கண்டும் கேட்டும் ரசியுங்கள்.



சென்னையில் இந்தப் படத்தில் ஒளித்தகடு கிடைத்ததும் வாங்கி விட்டேன். பாடல்கள் அனைத்தையும் வலையேற்றியும் விட்டேன். இந்தப் படத்தில் தொலினேனு ஜேயு என்ற தியாகராஜர் கீர்த்தனையையும் கபிகபி மேரே தில் மே என்ற பாடலையும் டி.எம்.சௌந்தரராஜனை நகைச்சுவை நையாண்டியோடு பாட வைத்திருக்கிறார் இளையராஜா. அதற்கு நடித்திருப்பவர் வி.கே.ராமசாமி. பாட்டைக் கேளுங்கள். இலவசமாக அந்தப் பாடலையும் இங்கேயே தருகிறேன்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

7 comments

நடிகை பூர்ணிமா ஜெயராமனை...இப்பொழுது பாக்யராஜை யாரும் எளிதில் மறக்க முடியாது. பலதரப்பட்ட பாத்திரங்களில் நடித்த சிறப்பான நடிகை அவர். மும்பையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்த அவர் முதலில் மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானாலும் பயணங்கள் முடிவதில்லை படம் அவருக்குத் தமிழில் நட்சத்திரக் கதாநாயகியாக்கியது. முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்த அவர் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார்.

அவருக்காக இசையரசி பி.சுசீலா அவர்கள் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார்கள். இவர் திரையுலகில் வந்த காலகட்டத்தில் இளையராஜா அறிமுக இசையமைப்பாளர் என்ற நிலை மாறி நட்சத்திர இசையமைப்பாளர் என்று நிலை பெற்று விட்ட காலகட்டம். மெல்லிசை மன்னரும் நல்ல பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம். சங்கர் கணேஷ், டி.ராஜேந்தர் போன்றோரும் கலக்கிக் கொண்டிருந்த காலகட்டம். அந்த பொழுதில் வந்த இரண்டு பாடல்களைப் பார்ப்போம் இந்தப் பதிவில்.

முதல் பாடல் தாலாட்டுப் பாட்டு. அதுவும் டி.ராஜேந்தர் இசையில். கிளிஞ்சல்கள் படத்திற்காக. சின்னச் சின்னக் கண்ணா என்ற இந்த அழகிய பாடல் மிக இனிமையானது. கேட்டால் கிறக்கும் இந்தப் பாடல் நம்மையும் சின்னக் கண்ணனாக்கும். குழந்தைக்காகப் பாடும் இந்தப் பாடலில் மறைபொருளாக காதலனுக்கும் காதல் சொல்வாள் நாயகி. ஆகத் தாலாட்டும் இருக்க வேண்டும். குறும்பு கொப்புளிக்கும் காதலும் இருக்க வேண்டும். ரொம்பவும் சிக்கலான இந்தச் சூழ்நிலையில் இசையிரசியின் குரல் விரசம் துளியும் இல்லாமல் காதலையும் தாய்மையையும் சொல்வதைக் கேட்டு ரசியுங்கள். இந்தப் பாடலை நமக்காகத் தந்த நண்பர் குமரனுக்கும் நன்றி பல.




இரண்டாவது பாடல் இளையராஜாவின் இசையில். மலேசியா வாசுதேவன் உடன் பாடிய காதல் பாட்டு. அந்தக் காலத்துச் சிங்கப்பூரை இந்தப் பாடலில் கண்டு களிக்கலாம். இந்தப் படத்தில்தான் முதன்முறையாக இசைஞானியின் இசையில் மெல்லிசை மன்னரும் பாடியிருக்கிறார். சீனத்துப் பட்டு மேனி இளஞ்சிட்டு மேனி என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். பூர்ணிமா ஜெயராமனுக்கும் அழகாகக் குரல் பொருந்துவதையும் குழைவதையும் கேட்டு இரசியுங்கள். இந்தப் பாடலை நமக்காக youtubeல் தந்த நண்பர் ராஜேஷுக்கு நன்றி.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

0 comments



பொன்னழகு ‍ பெண்ணழகு‍





திரையிசையில் எத்தனையோ குரல்கள் ஒலித்திருந்தாலும்
பெண்மையின் குரலாக ஆம் பெண்மையின் மென்மை, கோபம் என எல்லாவகையாகவும் ஒலித்த குரல் இசையரசியுனுடைய குரல்

இசையரசியும் எல்.ஆர். ஈஸ்வரியும் எத்தனையோ (female dueட்ச்) அதாவது
இரு பெண்களுக்கு பாடியிருக்கிறார்கள்
இங்கே ஆண்வேடமிட்டவருக்கு எல்.ஆர்.ஈஸ்வரியும், மஞ்சுளாவிற்கு இசையரசியும் குரல்கொடுக்க ஒரு அழகான மேடை நாடகம் அரங்கேறுகிறது

ரிக்ஷாக்காரனில் அதிகம் பிரபலமடையாத பாடல் ..
வாலியின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும் அற்புதம்

எம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே எம்.எஸ்.வி அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல .. ஒவ்வொரு பாடலும் கடலில் மூழ்கி எடுத்த முத்து போல விலைமதிப்பற்றது... இதிலும் இந்த பாடலை கேளுங்கள் .. அடேயப்பா மேடை பாடலில் கூட இத்தனை விஷயங்களை புகுத்த முடியும் என நிரூபித்திருப்பார்..

இசையரசியின் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் பொன்னழகு பெண்மையின் அழகு

பாடலை பார்த்து மகிழுங்கள்

2 comments



எத்தனையோ மொழிகளில் சுசீலாம்மா பாடியிருந்தாலும் ஹிந்தியில் அவ்வளவாக பாடவில்லை என்பது எல்லோருக்கும் ஒரு குறையாகவே உள்ளது..




சலீல் செளத்ரி சுசீலாம்மாவை ஹிந்திக்கு அழைத்தும் ஏனோ சுசீலாம்மா செல்லவில்லை.. சலீல் செளத்ரி சொன்னது ஆஷாஜி மாதிரியும் இல்லாமல் லதாஜி மாதிரியும் இல்லாமல் புதுவிதமாக இருக்கிறது என்று தான் . அது 100/100 உண்மை என்பதை இந்த பாடலை கேட்டாலே தெரியும்

இதை தவிற இன்னும் சில பாடல்களை பாடியிருக்கிறார்.

இதோ " உய் மா பக்லி மேரா நாம் ரக் தியா"

படம்: பச்பன்
இசை: லக்ஷ்மிகாந்த் − பியாரிலால்



6 comments

பழைய நடிகை விஜயகுமாரியை யாரும் மறந்திருக்க முடியாது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்ததை இன்றைக்கும் கே.டிவி நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறதே. அவருக்காக இசையரசி நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றாலும் இந்த ஒரு பாடல் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது.

கருநிறமென்பது அழகன்று என்று ஒரு மூடநம்பிக்கை இன்றும் உலகெங்கும் இருப்பதை நாம் அறிவோம். அது ஒரு பெண்ணானால்? அந்த நிறத்திற்காகவே அவள் பழிக்கப்பட்டாள்? இழிக்கப்பட்டாள்? அந்த வேதனனயை என்ன சொல்வாள்?

கருப்பாக இருக்கும் ஆண்டவன் வேண்டும். பெண் வேண்டாமா? அதுதான் அவள் கேட்கும் கேள்வி? அதற்கு விடை இன்றும் நம்மிடையே இல்லை.

நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்திற்காக சுதர்சனம் இசையில் கவியரசர் கண்ணதாசனின் பாடல் நமக்காக இசையரசி பி.சுசீலா அவர்கள் குரலில் கிடைக்கிறது. கேளுங்கள்.

இந்தப் பாடலையும் தந்து அதை விருப்பமாகவும் வெளியிட்ட நண்பர் கூமுட்டை அவர்களுக்கு நன்றி பல.



அன்புடன்,
கோ.இராகவன்

4 comments



மத்தாப்பு சுந்தரி ஆட்டத்த பாருங்கோ!!

நாட்டுப்புற வரிசை − 3



இப்ப வரும் குத்தாட்ட பாடல்களில் என்ன இருக்கிறது

இந்த பாட்டை கேளுங்கள்/பாருங்கள் கிராமத்து ஆட்டத்தை கள்ளப்பார்ட் நடராஜனும் குழுவினரும் தத்ரூபமாக ஆடியிருப்பார்கள்.. அதே போல்
மருதகாசியின் பாடல் வரிகளும், கே.வி.மகாதேவனின் துள்ளல் மெட்டும்
எஸ்.சி.கிருஷ்ணன்,சுசீலாவின் குரலிசையில் அடேயப்பா..

வண்ணக்கிளி திரைப்படம் ஆர்.எஸ்.மனோகரை ஹீரோவாக உயர்த்திய படம். பி.எஸ்.சரோஜா, மைனாவதி, பிரேம் நசீர் என பலரும் நிறைந்த படம்
மாமாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்

திருச்சி லோகனாதன்,சுசீலா பாடும் அடிக்கிற கை தான் அணைக்கும்,
சீர்காழியார் பாடும் மாட்டுக்கார வேலா உன் மாட்ட,
சுசீலா,சீர்காழியார் பாடும் வண்டி உருண்டோட அச்சானி தேவை,
சுசீலா பாடும் சின்னப்பாப்பா எந்தன் செல்ல பாப்பா
மற்றும் சீர்காழியார்,சுசீலா பாடும் ஓடுகிற தண்ணியில
என எல்லாமே ஜனரஞ்சக பாடல்கள்
இருந்தாலும் நம்மை ஆட வைக்கும் சித்தாட கட்டிக்கிட்டு பாடலுக்கு மவுசு அதிகம் தான்







கேட்டு மகிழுங்கள்:

சுசீலா: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
சுசீலா: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்
பெண் குழுவினர்: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
ஆண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
கிருஷ்ணன்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்
குழுவினர்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பாப் பேசும் நல்லவளாம்
கிருஷ்னன்: அஹா ஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓ
சுசீலா: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
பெண் குழுவினர்: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
சுசீலா: ஆஆஆஆ
கிருஷ்ணன்: ஆஆஆஆஆஆ
ஆண் குழுவினர்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
கிருஷ்ணன்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆண் குழுவினர்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆனாலும் பெண் ஏன்றால் அவன் அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
கிருஷ்ணன்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
பெண் குழுவினர்:ஆஆஆஆ
ஆண் குழுவினர்: ஆஆஆ
பெண் குழுவினர்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
ஆண் குழுவினர்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
சுசீலா: அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
கிருஷ்ணன்: இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
பெண் குழுவினர்: அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க
ஆண் குழுவினர்: கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க

பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
ஆண் குழுவினர்: சிங்காரம் பண்ணிக்கிட்டு
பெண் குழுவினர்: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
ஆண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
பெண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
ஆண் குழுவினர்: மொழ நீள சரம் தொடுத்து
பெண் குழுவினர்: வித்தார கள்ளி கழுத்தில்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்