Showing posts with label எம்.எஸ்.விஸ்வநாதன். Show all posts
Showing posts with label எம்.எஸ்.விஸ்வநாதன். Show all posts
2 comments




சுசீலாம்மா, பி.பி.ஸ்ரீனிவாச் கொஞ்சும் குரலில் அழகான பாடல் கேளுங்கள்.

படம்: பாசமலர்
பாடகர்கள்: பி.பி.எஸ், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

சலவைக் கல்லே சிலையாக
தங்கப் பாளம் கையாக
மலர்களில் இரண்டும் விழியாக
மயங்க வைத்தாளோ ஓஓ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

முத்து மணிதிரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
முத்து மணிதிரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ

செக்கச் சிவந்த இதழாமே
சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச் சிவந்த இதழாமே
சிந்தும் புன்னகை மந்திரமோ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்

நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானால்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானால்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்

மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

Get this widget | Track details | eSnips Social DNA

5 comments

இந்த வலைப்பூவில் சேர்ந்தவுடன் ஜிராவிடம் ஒரு பாட்டை நான் தான் பதிவிடுவேன் என முன்பதிவு செய்துக்கொண்டேன்்.
சிறு வயதில் இருந்தே எனை பெரிதும் கவர்ந்த பாடல் அது!! பாடலை கேட்டாலே ஒரு வித அமைதி நம்மை சுற்றி பரவிக்கொள்ளும்.கதாபாத்திரங்களின் சூழ்நிலைக்கேற்ப கச்சிதமாக படத்தில் பொருந்தும் பாடல் அது.

"புதிய பறவை" எனும் படத்தில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ" எனும் பாடல் தான் அது!!
பாடலின் தொடக்கத்தில் சுசீலாவின் ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் கம்பீரம் பாடல் முடியும் வரை நிறைந்து நிற்கும். பாடலின் படமாக்கிய விதமும்,எடிட்டிங்,லைட்டிங்,நடன அமைப்பு எல்லாமே நம்மை பாடலுடன் ஒன்றச்செய்துவிடும்.

இதனுடன் சிவாஜி மற்றும் சௌகார் ஜானகியின் நடிப்பு வேறு களை கட்டும்!!! சுட்டும் விழி பார்வையில் கண்களை உருட்டி உருட்டி சௌகார் ஜானகி பாடுவதும்,தன்னையே மறந்து (ஜொல்லு விட்டுக்கொண்டு) பாடலையும் பாடகியையும் ஒரு வித திகைப்போடு சிவாஜி ரசிப்பதும்!! ஆஹா!! அற்புதம்!!!
இந்த பாடலில் கம்பீரமும் ஆடம்பரத்தன்மையும் எடுத்து காட்டுவதற்காக பல இசைக்கருவிகளை எம்.எஸ்.விஸ்வநாதன் பயன்படுத்தினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் முயற்சிகள் எதுவும் வீண் போகவில்லை என்பதை தைரியமாக சொலலாம் என்று நினைக்கிறேன்.

இந்த பாடல் ஒரு மேற்கத்திய பாடலால் இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு!!
அதை பற்றிய விஷயங்களை இந்த பதிவிற்கு போய் தெரிந்து கொள்ளுங்கள்!! :-)

இத்தனையும் சொல்லிட்டு பாடல் வரிகள் பற்றி சொல்லாமல் போக முடியுமா??கவியரசர் கண்ணதாசன் எப்பவும் போல கலக்கியிருக்காரு!! என்ன வார்த்தை விளையாட்டு!!

உதாரணத்திற்கு

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)


ஆகா ஆகா!!
இசைக்கும் கதைக்கும் கனக்கச்சிதமாக பொருந்தக்கூடிய வார்த்தையாடல்!!இவரின் வைர வரிகள் என்னை இந்த பாடலை மேலும் மேலும் ரசிக்க வைத்தது!!

சரி சரி!! என் மொக்கையை நிறுத்திக்கொண்டு உங்களை பாடலை கேட்க விடுகிறேன்!! :-)

என்ன ?? உங்களுக்கும் இது ரொம்ப பிடித்தமான பாடலா???
அப்போ பின்னூட்டத்தில் சொல்லிட்டு போலாமே!! :-)



படம் : புதிய பறவை
பாடல் : பார்த்த ஞாபகம் இல்லையோ
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வனாதன்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)

5 comments

சமீபத்தில் குமுதம் வாரயிதழில் கேள்விபதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. அதில் ஒரு கேள்வியில் அவருக்குப் பிடித்த பாடகியான இசையரசி பி.சுசீலா அவர்களைப் பற்றிச் சொல்லும்படிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் கொடுத்த விடை இங்கே.



இதோ வைரமுத்து எழுதி இசையரசி பாடிய ஒரு பாடல். வி.எஸ்.நரசிம்மன் இசையில் அச்சமில்லல அச்சமில்லை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மலேசியா வாசுதேவன் உடன் பாடிய ஓடுகிற தண்ணியில என்ற அழகான பாடல்.

அன்புடன்,
கோ.இராகவன்