வெற்று காகிதமானாலும் நம் கண்முன் தோன்றும் கணினியின் திரையானாலும்
கவிதை கனவுகளை உண்மையாக்க என்றும் முயற்சி செய்திருக்கிறோம்.
இதோ சமீப காலமாக ஜெர்மணியின் செந்தேன்மலர் கவிதை கவிக்குயில்
ராகினி பாஸ்கரன் அவர்களின் தொகுப்பு ஒலித்தொகுப்புக்களாகவும்,
அதுவும் நம் கனவுகளை உண்மையாக்கும் திரையிசை பாடல்களின் குத்தகைதாரர் வெள்ளைக்குயில் சுசில்லாம்மாவின் சுகந்தம் வீசும்
சுகமான குரலுடன் இரண்டும் சேர்ந்து நம் மனதை
என்னென்னவோ என்னென்னவோ எதிர்ப்பார்க்க வைக்கின்றன அவை
இன்னமும் இன்னமும் இது போன்ற குயில்கள் வராதா என்று.
திரையிசை தொகுப்பில் கவிதைகள் ஒலித்தாலும் அவைகளை
வரிவடிவமாக இங்கே பதிய முயற்சி செய்தும் விட்டு விட்டேன்
ஏனென்றால், கவிதையின் சாராம்சம் தட்டச்சு பிழையால்
தடம் மாற வாய்புகள் ஏராளம் என்பதால் ஆக்கத்தை உருவாக்கிய
அறிவிப்பாளரின் கொஞ்சும் குரலிலே கேட்டு மகிழ நேயர்களிடமே விட்டுவிட்டேன்.
இந்த இரு ஒலித்தொகுப்புக்களூம் ஜெர்மனி நாட்டின்
ஏகோபித்த அபிமானிகளை பெற்ற இ.டி.ஆர் வானொலியில்
வலம் வந்தவை இந்த கவிக்குரல் மற்றும் கவிக்குயில்
இருவரும் நீடுழி வாழ்ந்து இணைய நண்பர்களூக்கு
இனிய படைப்புக்களை வழங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஜெர்மனி, ராகினி பாஸ்கரன்

முதல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு >> மலர்கள் நனைந்தன பனியாலே >> என்னுயிர் தோழி கேளொரு சேதி.

Get this widget | Track details | eSnips Social DNA


இரண்டாவது தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

நான் உன்னை தேடுகிறேன் >> உன்னை உன்னை எண்ணி >> ஆயிரம் பெண்மை மலரட்டுமே >> உறவு சொல்ல ஒருவன்

Get this widget | Track details | eSnips Social DNA

0 comments:

Post a Comment