1 comments
என் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும்
இசையரசியும் ஏ.எம்.ராஜா பாடிய பூலோக ரம்பை
பாடல்
இன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள்.
1 comments
என் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும்
இசையரசியும் ஏ.எம்.ராஜா பாடிய பூலோக ரம்பை
பாடல்
Labels: a.m.raja, சுசீலா p.susheela p.suseela
1 comments
இசையரசி பதிவில் என் பங்குக்குப் பாட்டுப் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஒரு பாடல். இன்று வேலை முடிந்து களைப்போடு இரவு உணவை எடுத்துக் கொண்டிருக்கும் போது ஜெயா டிவியில் வந்த இந்தப் பாடலை கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பின்னர் கேட்கிறேன்.
"சட்டம் என் கையில்" படத்தில் வரும் "ஒரே இடம் நிரந்தரம்...இதோ உன் துணை, இதோ என் இசை" என்ற இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் பி.சுசீலா. இடையில் மலேசியா வாசுதேவன் என்று நினைக்கிறேன், அல்லது அவர் சாயலில் ஒரு ஆண் குரலில் ஹம்மிங் ஒலிக்கிறது இந்தப் பாடல். இசையமைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. ராஜாவின் ஆரம்ப காலப் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பு இருக்கும். அந்த உணர்வை இந்தப் பாடலும் ஏற்படுத்துகின்றது. பி.சுசீலா தவிர்த்து வேறு யாராவது பாடியிருந்தால் அந்த சாயல் பெரிதாகத் தெரிந்திருக்காது என்று நினைக்கும் போது பாடலை ஒலிக்க விட்டுப் பின்னணியில் போகும் இசையைக் கேட்டால், அதில் வரும் பேஸ் கிட்டாரும் எம்.எஸ்.வி ரகமாக இருக்கிறது.
ஒரு விரகதாப சூழ்நிலைக்கு எடுக்கப்பட்ட பாடல் என்றாலும் லேசான சோகம் கலந்த உணர்வு கேட்கம் போது எழாமல் இல்லை, அதுவே இந்தப் பாடலின் தனித்துவம் ஆகி விடுகின்றது.
0
comments

வெண் தாமரை வாணி
மன்னவன் வந்தானடி >> நாளை என்ற வேளை பார்த்து >> நவராத்திரி சுபராத்திரி >> காதலெனும் வடிவம் கண்டேன் >> கண்ணா கருமை கண்ணா >> லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் >> பாலிருக்கும் பழமிருக்கும் >> ஓராயிரம் நாடகம் >> மாலை பொழுதின் மயக்கத்திலே >> வசந்ததில் ஓர் நாள்.
Clik here for download
இசையன்பர்களே வானொலி நேயர்களின் ரசனைகள் தான் எவ்வேறு வித்தியாசமானவை மேலே உள்ள பாடல்கள் அனைத்தும் பல முறை கேட்ட பாடல்கள் தான். ஏன் நானே இந்த தளத்திலும், தேன்கிண்ணத்திலும் தொகுப்புகளாக பதிந்துள்ளேன். சுசீல்லாம்மாவின் குரலில் வெளிவந்த இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் ஓவ்வொருமுறையும் நம் பழைய நினவுகளை இனிமை என்ற சங்கிலியால் கட்டி இழுத்து கொண்டு வெளியில் போட்டு விடுகின்றன பாடல்களின் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்க்கு நாம் படாத பாடு படுகிறோம். அந்த வகையில் நேற்று ஒரு சுசில்லாம்மாவின் அருமையான ஒலித்தொகுப்பு வானொலியில் கேட்டேன் ஒரு நேயரின் அற்புதமான ரசனை கொண்ட தொகுப்பு இவை. உருவாக்கியவர் குறிச்சியில் வசிக்கும் திருமதி.ரேவதி தியாரகராஜன் அவர்கள் சுசீலாம்மாவின் குரலிற்க்கு தன் கிண்கிணி மணிகளால் தோரணம் கட்டி தன் அற்புத ரசனைப் பூக்களால் எவ்வாறு அர்ச்சனை செய்கிறார் நீங்களூம் கேளூங்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அற்புதமாக வழக்கம் போல் நிறுத்தி நிதானமாக ஆக்கத்தின் வரிகளை அச்சரம் பிசகாமல் பேசி தொகுத்து
வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள். இணைய இசை நேயர்களின் அன்பு உள்ளங்களை உருண்டையாக உருட்டி தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சுசில்லாம்மவுக்கும் அவரின் குரலை அனுஅனுவாக ரசித்த திருமதி.ரேவதி தியாகராஜன் அவர்களூக்கும், நான் கேட்ட இந்த ஒலித்தொகுப்பை உஙகளுக்கும் வழங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய வானவில் பண்பலைக்கும், சுந்தர தமிழில் சொக்க வைத்த சுந்த்ரராஜன் அவர்களூக்கும் சூசீலாம்மா தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் பெருமையடைகிறேன்.
|
Labels: P.Susheela, RADIO, சுசீலா p.susheela p.suseela
0
comments

வெற்று காகிதமானாலும் நம் கண்முன் தோன்றும் கணினியின் திரையானாலும்
கவிதை கனவுகளை உண்மையாக்க என்றும் முயற்சி செய்திருக்கிறோம்.
இதோ சமீப காலமாக ஜெர்மணியின் செந்தேன்மலர் கவிதை கவிக்குயில்
ராகினி பாஸ்கரன் அவர்களின் தொகுப்பு ஒலித்தொகுப்புக்களாகவும்,
அதுவும் நம் கனவுகளை உண்மையாக்கும் திரையிசை பாடல்களின் குத்தகைதாரர் வெள்ளைக்குயில் சுசில்லாம்மாவின் சுகந்தம் வீசும்
சுகமான குரலுடன் இரண்டும் சேர்ந்து நம் மனதை
என்னென்னவோ என்னென்னவோ எதிர்ப்பார்க்க வைக்கின்றன அவை
இன்னமும் இன்னமும் இது போன்ற குயில்கள் வராதா என்று.
திரையிசை தொகுப்பில் கவிதைகள் ஒலித்தாலும் அவைகளை
வரிவடிவமாக இங்கே பதிய முயற்சி செய்தும் விட்டு விட்டேன்
ஏனென்றால், கவிதையின் சாராம்சம் தட்டச்சு பிழையால்
தடம் மாற வாய்புகள் ஏராளம் என்பதால் ஆக்கத்தை உருவாக்கிய
அறிவிப்பாளரின் கொஞ்சும் குரலிலே கேட்டு மகிழ நேயர்களிடமே விட்டுவிட்டேன்.
இந்த இரு ஒலித்தொகுப்புக்களூம் ஜெர்மனி நாட்டின்
ஏகோபித்த அபிமானிகளை பெற்ற இ.டி.ஆர் வானொலியில்
வலம் வந்தவை இந்த கவிக்குரல் மற்றும் கவிக்குயில்
இருவரும் நீடுழி வாழ்ந்து இணைய நண்பர்களூக்கு
இனிய படைப்புக்களை வழங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஜெர்மனி, ராகினி பாஸ்கரன்
முதல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு >> மலர்கள் நனைந்தன பனியாலே >> என்னுயிர் தோழி கேளொரு சேதி.
|
|
Labels: RADIO
2
comments

ஆதிபராசக்தி அம்ருதவர்ஷினி என்ற அழகான பாடல்
பாடல் இடம்பெற்ற திரை : பொன்னபுரம் கோட்டா
இசை: தேவராஜன் மாஸ்டர்
வரிகள்: வயலார்
குரல்கள்: யேசுதாஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா, மாதுரி, லீலா
குறிப்பாக மாதுரி சுசீலா பாடும் ஜதிஸ்வர பகுதி அருமை.
5
comments

இசையரசியின் இனிமையான தெரிவுகள்
இசையரசியின் அபிமானிகளே ரொம்ப நாள் கழித்து வந்துள்ளேன். இசையரசியின் இனிமையான பாடல்கள் எல்லோரும் கேட்ட பாடல்கள் தான். அவரின் வாழ்க்கை தகவல்களுடன், திரைப்படத்துடன் கொண்ட தகவல்களூடன். அற்புதமான ஒலித்தொகுப்பு சென்ற வாரத்தில் வானொலியில் ஒலிப்பரப்ப்பட்டது. அறிவிப்பாளர் மிகவும் அழகாக அவரின் தகவல்க்ளை தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. இதுபோல் ஒலித்தொகுப்புகள் இந்த தளத்தில் வந்துள்ளாதா என்று தெரியவில்லை? (ஜீரா சார், பிரபாசார் நீங்கதான் சொல்லனும்)இந்த பதிவு வரும் நாள் என் திருப்பூர் அன்பர் திரு. அகிலா விஜயகுமார் அவர்கள் மூலம் என்னிடம் இசையரசி பற்று சில தகவல்கள் கேட்டார்கள். நான் இணையத்தில் தேடி பிடித்து உடனே அனுப்பிவைத்தேன். அறிவிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இசையன்பர்களே ஒலித்தொகுப்பை கேட்டு உங்கள் மேலான உணர்வுகளை ஒரு வரியில் எழுதுங்கள். ஆக்கத்தை உருவாக்கியவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இசையரசியின் ரசிகர்கள் சார்பாக. ஆக்கத்தை உருவாக்கிய அறிவிப்பாளர் தொண்டாமுத்தூர் திரு. ரவி அவர்களூக்கு வாழ்த்துக்கள். நன்றி.
குறிப்பு: ஒலிக்கோப்பின் நீளம் அதிகம் ஆகையால் தரவிறக்கம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இசையன்பர்கள் இசையரசியின் மழையில் மறுபடியும் நனைய வாருங்கள் என்று அழைக்கின்றேன். கோவை ரவி
|
Labels: p.suseela, RADIO, சுசீலா p.susheela p.சுசீலா
8
comments
நீண்ட நாட்களாக இசையரசி பதிவு வெறுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு இனிய பாடலுடன் இந்த இடைவெளியை நிரப்புகின்றேன். இந்தப் பதிவு இசையரசி பி.சுசீலாவுடன் எஸ்.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ஒரு ஜோடிப் பாடல்.
இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லி விடலாம், பாடல்கள் சிறப்பாக, இனிமையாக இருக்கும் என்று. ஆர்.சுந்தரராஜன் இளையராஜாவோடு கூட்டணி சேரும் போது மட்டுமல்ல, தேவாவோடு "என் ஆசை மச்சான்" போன்ற படங்களில் இணைந்தபோதும், "அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை" திரைப்படத்தில் கே.வி.மகாதேவனோடு இணைந்தபோதும் கூட அந்தச் சிறப்பு இருந்தது.
சரணாலயம் திரைப்படம் ஆர்.சுந்தராஜன், எம்.எஸ்விஸ்வநாதனோடு இணைந்து பணியாற்றிய வந்த அருமையான பாடல்களோடு வந்த படமாகும். குறிப்பாக நான் இங்கு தரும் "நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு" பாடலைக் கேளுங்கள், உண்மை புரியும். எம்.எஸ்.வி எண்பதுகளிலும் சோர்ந்து விடவில்லை என்பதற்கு இப்படியான பாடல்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.
Labels: எம் எஸ் வி, சுசிலா