4 comments



மத்தாப்பு சுந்தரி ஆட்டத்த பாருங்கோ!!

நாட்டுப்புற வரிசை − 3



இப்ப வரும் குத்தாட்ட பாடல்களில் என்ன இருக்கிறது

இந்த பாட்டை கேளுங்கள்/பாருங்கள் கிராமத்து ஆட்டத்தை கள்ளப்பார்ட் நடராஜனும் குழுவினரும் தத்ரூபமாக ஆடியிருப்பார்கள்.. அதே போல்
மருதகாசியின் பாடல் வரிகளும், கே.வி.மகாதேவனின் துள்ளல் மெட்டும்
எஸ்.சி.கிருஷ்ணன்,சுசீலாவின் குரலிசையில் அடேயப்பா..

வண்ணக்கிளி திரைப்படம் ஆர்.எஸ்.மனோகரை ஹீரோவாக உயர்த்திய படம். பி.எஸ்.சரோஜா, மைனாவதி, பிரேம் நசீர் என பலரும் நிறைந்த படம்
மாமாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்

திருச்சி லோகனாதன்,சுசீலா பாடும் அடிக்கிற கை தான் அணைக்கும்,
சீர்காழியார் பாடும் மாட்டுக்கார வேலா உன் மாட்ட,
சுசீலா,சீர்காழியார் பாடும் வண்டி உருண்டோட அச்சானி தேவை,
சுசீலா பாடும் சின்னப்பாப்பா எந்தன் செல்ல பாப்பா
மற்றும் சீர்காழியார்,சுசீலா பாடும் ஓடுகிற தண்ணியில
என எல்லாமே ஜனரஞ்சக பாடல்கள்
இருந்தாலும் நம்மை ஆட வைக்கும் சித்தாட கட்டிக்கிட்டு பாடலுக்கு மவுசு அதிகம் தான்







கேட்டு மகிழுங்கள்:

சுசீலா: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
சுசீலா: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்
பெண் குழுவினர்: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
ஆண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
கிருஷ்ணன்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்
குழுவினர்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பாப் பேசும் நல்லவளாம்
கிருஷ்னன்: அஹா ஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓ
சுசீலா: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
பெண் குழுவினர்: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
சுசீலா: ஆஆஆஆ
கிருஷ்ணன்: ஆஆஆஆஆஆ
ஆண் குழுவினர்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
கிருஷ்ணன்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆண் குழுவினர்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆனாலும் பெண் ஏன்றால் அவன் அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
கிருஷ்ணன்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
பெண் குழுவினர்:ஆஆஆஆ
ஆண் குழுவினர்: ஆஆஆ
பெண் குழுவினர்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
ஆண் குழுவினர்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
சுசீலா: அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
கிருஷ்ணன்: இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
பெண் குழுவினர்: அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க
ஆண் குழுவினர்: கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க

பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
ஆண் குழுவினர்: சிங்காரம் பண்ணிக்கிட்டு
பெண் குழுவினர்: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
ஆண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
பெண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
ஆண் குழுவினர்: மொழ நீள சரம் தொடுத்து
பெண் குழுவினர்: வித்தார கள்ளி கழுத்தில்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்


2 comments

நாட்டுப்புற வரிசை − 3

தேன் கூடு நல்ல தேன் கூடு − தூக்கனாங்குருவிக்கூடு


நாட்டுப்புற பாடல்கள் தான் எத்தனை வகை ஏறு பிடிக்க பாட்டு, நாத்து நட பாட்டு, தாலாட்ட பாட்டு என பல வகை அதில் இந்த பாடல் ஒரு வகை

இது ஒரு துள்ளல் வகையான நாட்டுப்புற பாடல்

கவிஞரின் சொந்த தயாரிப்பான வானம்பாடி
மாமாவின் இசையில் எல்லா பாடல்களுமே அற்புத பாடல்கள்
ஆம் ஆண்கவியை வெல்ல வந்த என்ற போட்டி பாடலாகட்டும்,
மனதை உருக்கும் கங்கைக்கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
நெஞ்சை நெகிழ வைக்கும் கடவுள் ஏன் கல்லானான்
ஏட்டில் எழுதி வைத்தேன் என எல்லாமே காலத்தால் அழியா கானங்கள்
இந்த பாடல்களோடு துள்ளிசையாக அமைந்த நாட்டுப்புற பாடல், தான்
தூக்கனாங்குருவிக்கூடு என்ற பாடல்

சும்மா வெளுத்து வாங்கியிருப்பாங்க சுசீலாம்மா
கவிஞர் மட்டும் என்ன குறைச்சலா .. ஆனானப்பட்டா ராஜா கூட மயங்கனும் கேட்டு ..மயங்கமாட்டாரா என்ன?

தூக்கணாங்குருவிக் கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நெனப்பு மனசிலே

பாக்கிறான் பூ முகத்தைப்
பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நெனப்பு தெரியலே

(தூக்கணாங்)

அம்மான் வீட்டுப் பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளிக் கொடுக்க வேண்டாமா
கம்மான் கையில் பொன்னை வாங்கிக்
கட்டிக் கொள்ள வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப் போட்டு
காத்துக் கிடக்க வேண்டாமா

(தூக்கணாங்)

கூரைக் குடிசை நடுவிலே
அந்தப் படுக்கையப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சு
கோலத்தப் போட்டு
ஆற அமர மச்சானோடு
படிக்கணும் பாட்டு
ஆனானப்பட்ட ராஜா கூட
மயங்கணும் கேட்டு...
அத விட்டு...

(தூக்கணாங்)


5 comments

இந்த வலைப்பூவில் சேர்ந்தவுடன் ஜிராவிடம் ஒரு பாட்டை நான் தான் பதிவிடுவேன் என முன்பதிவு செய்துக்கொண்டேன்்.
சிறு வயதில் இருந்தே எனை பெரிதும் கவர்ந்த பாடல் அது!! பாடலை கேட்டாலே ஒரு வித அமைதி நம்மை சுற்றி பரவிக்கொள்ளும்.கதாபாத்திரங்களின் சூழ்நிலைக்கேற்ப கச்சிதமாக படத்தில் பொருந்தும் பாடல் அது.

"புதிய பறவை" எனும் படத்தில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ" எனும் பாடல் தான் அது!!
பாடலின் தொடக்கத்தில் சுசீலாவின் ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் கம்பீரம் பாடல் முடியும் வரை நிறைந்து நிற்கும். பாடலின் படமாக்கிய விதமும்,எடிட்டிங்,லைட்டிங்,நடன அமைப்பு எல்லாமே நம்மை பாடலுடன் ஒன்றச்செய்துவிடும்.

இதனுடன் சிவாஜி மற்றும் சௌகார் ஜானகியின் நடிப்பு வேறு களை கட்டும்!!! சுட்டும் விழி பார்வையில் கண்களை உருட்டி உருட்டி சௌகார் ஜானகி பாடுவதும்,தன்னையே மறந்து (ஜொல்லு விட்டுக்கொண்டு) பாடலையும் பாடகியையும் ஒரு வித திகைப்போடு சிவாஜி ரசிப்பதும்!! ஆஹா!! அற்புதம்!!!
இந்த பாடலில் கம்பீரமும் ஆடம்பரத்தன்மையும் எடுத்து காட்டுவதற்காக பல இசைக்கருவிகளை எம்.எஸ்.விஸ்வநாதன் பயன்படுத்தினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் முயற்சிகள் எதுவும் வீண் போகவில்லை என்பதை தைரியமாக சொலலாம் என்று நினைக்கிறேன்.

இந்த பாடல் ஒரு மேற்கத்திய பாடலால் இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு!!
அதை பற்றிய விஷயங்களை இந்த பதிவிற்கு போய் தெரிந்து கொள்ளுங்கள்!! :-)

இத்தனையும் சொல்லிட்டு பாடல் வரிகள் பற்றி சொல்லாமல் போக முடியுமா??கவியரசர் கண்ணதாசன் எப்பவும் போல கலக்கியிருக்காரு!! என்ன வார்த்தை விளையாட்டு!!

உதாரணத்திற்கு

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)


ஆகா ஆகா!!
இசைக்கும் கதைக்கும் கனக்கச்சிதமாக பொருந்தக்கூடிய வார்த்தையாடல்!!இவரின் வைர வரிகள் என்னை இந்த பாடலை மேலும் மேலும் ரசிக்க வைத்தது!!

சரி சரி!! என் மொக்கையை நிறுத்திக்கொண்டு உங்களை பாடலை கேட்க விடுகிறேன்!! :-)

என்ன ?? உங்களுக்கும் இது ரொம்ப பிடித்தமான பாடலா???
அப்போ பின்னூட்டத்தில் சொல்லிட்டு போலாமே!! :-)



படம் : புதிய பறவை
பாடல் : பார்த்த ஞாபகம் இல்லையோ
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வனாதன்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)

2 comments

தேரு பாக்க வாரீகளா.....

நாட்டுப்புற பாட்டு வரிசை − 2

தேர்த்திருவிழா பாத்திருக்கீங்களா? தென்னாட்டு திருவிழாக்களில் தேர்த்திருவிழா மிகவும் முக்கியமான ஒன்று. இளைஞர்கள் வடம் பிடிக்க, தேர் ஆடி அசைந்து வீதி வீதியாக வரும் அழகும், சாலையின் இரு ஓரங்களிலும் சாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் மக்கள், நீர் மோர் என ஒரே அமர்க்களம் தான் போங்கள்

அப்படி ஒரு அமர்க்களமான பாட்டு தான் இந்த பாட்டு..இசையரசியும், ஏழிசை வேந்தரும் சும்மா பூந்து விளையாடியிருப்பாங்க... மெல்லிசை மன்னரின் இசையும், கண்ணதாசனின் வரிகளும் இந்த பாடலை மேலும் மெருகேற்றுகின்றது... நாட்டுப்புற மெட்டை எவ்வளவு அழகாக பயன்படுத்தியிருக்கிறார் மெல்லிசை மன்னர்.திரையில் சிவாஜியும், பத்மினியும் ஆட்டம் போட்டிருப்பார்கள் பாருங்கள் இன்றைய குத்தாட்டம் எல்லாம் ஒன்னுமில்லை

அதிலும் இசையரசி இனிக்க இனிக்க நெனச்சு... இரவும் பகலும் துடிச்சு.. பாடுவதை கேளுங்கள் அந்த நடுக்கம் கிரமாத்து பெண்ணுக்கே உரிய கூச்சத்தை குரலில் காட்டுவார்..

படம்: இரு துருவம்

தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரைப் பெண்ணே - உன்னைத்
திருடிக்கொண்டு போகட்டுமா
பத்தினிப்பெண்ணே
பத்தினிப் பெண்ணே...

ஊரு பாக்க மணமுடிப்போம்
பொறுத்திரு கண்ணா - அப்போ
ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா..
ஒண்ணுல ஒண்ணா

ஆ..ஆடையைத் தொட்டவன் ஜாடையைத் தொட்டவன்
மேடையைத் தொட்டாண்டி
அள்ளுற அள்ளுல கிள்ளுற கிள்ளுல
வெக்கத்தை விட்டாண்டி

அம்மாடி.. கொஞ்சம் பூச்சூடவா
அத்தாணி முத்தம் நான் போடவா

அம்மானே பெத்த பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்க லோகம்

(தேரு)

எடுத்து எடுத்துக் கொடுக்க
கொடுத்துக் கொடுத்துச் சிரிக்க
அடுத்து அடுத்து நடக்கும் நாளை
நெனச்சு கொள்ளேண்டி..
நெனச்சு கொள்ளேண்டி..

இனிக்க இனிக்க நெனச்சு
இரவும் பகலும் துடிச்சு
படுத்துப் படுத்துப் புரண்ட நாளை
நெனச்சுக் கொள்வேனோ..
நெனச்சுக் கொள்வேனோ..

(தேரு)

சிரிச்சு மயக்கும் ஒருத்தி
செடியில் வெடிச்ச பருத்தி
அணைச்சு ரசிக்கும் நாளை நெனச்சு
ஆட வந்தேண்டி.. ஆட வந்தேண்டி..

நெனைக்கத் தெரிஞ்ச மனசு
ரசிக்க தெரிஞ்ச வயசு
வளைக்கும் சுகத்தை நெனச்சுத்தானே
வந்தேன் முன்னாடி.. வந்தேன் முன்னாடி..

ஐயய்யய்யே.. மறைக்க மறைக்கத் துடிக்கும்..
ஐயய்யய்யே.. நெருங்க நெருங்க நெனைக்கும்..

ஆஹா.. கட்டுற கட்டுல வெட்டுற வெட்டுல
ஊர்வசி கெட்டாடி..
ஆஹா.. மாப்பிள்ளை போடுற மந்திரத்தில் அந்த
இந்திரன் கெட்டாண்டி..

(அம்மாடி)

பாடலை இங்கே கேட்டு மகிழவும்

http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong363.ram

6 comments

நாட்டுப்புற பாட்டு இது நாடறியாத பாட்டு

முன்பு சுசீலா நாட்டுப்புற பாடல்கள் குறைவாக பாடியிருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது அது உண்மையல்ல

அதற்கு உதாரணம் எத்தனையோ பாடல்கள்
50'களில் சித்தாட கட்டிக்கிட்டு தொடங்கி 90'களில் வந்த பாடல்கள் வரை

93' ல் வெளிவந்த அரண்மனைக்கிளி படத்தில் ராஜாவின் ராஜாங்க இசையை யாரும் மறந்திருக்க முடியாது
ஆம் ஜானகியின் வான்மதியே ஓ வான்மதியே
மனோ−மின்மிணியின் அடி பூங்குயிலே பூங்குயிலே பாடல்களுக்கு மத்தியில்
இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை ஆனாலும் இது ஒரு அழகான நாட்டுப்புற பாடல் சடங்கு பற்றி அழகாக பிறைசூடன் எழுத ராஜா சுசீலாவை அழைத்தார் இதை பாட. எந்த பாடல் என்று ஞாபகம் வருகிறதா .. ஆம் " நட்டுவெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா " என்ற அழகான மெட்டுடைய பாடல் அது ..

சுசீலாவின் குரலை கேளுங்கள் என்ன இனிமை என்ன தெளிவு .
குறைந்த வாத்தியங்கள் பயன்படுத்தியிருப்பார் ராஜா காரணம் சுசீலாவின் குரலே பல ஜாலங்களை செய்யுமே.
"மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்" சுசீலா குழைவார்

இதோ பாடல் வரிகள்

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா

மானுக்கு மேலழகு
மயிலுக்குத்தான் வாலழகு
பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்
மொத்தமா அழகிருக்கு தனித்தனியா சொல்லனுமா
அம்மம்மா பேரழக பிரிக்கனுமா
பொத்தித்தான் வைச்சாலும் வந்திடும் பூவாசம்
பொண்ணு தான் ஆளானா நிச்சயம் கல்யாணம்
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா

நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா

வான வளைச்சு அந்த வானவில்லை போட்டது போல்
நம்ம வளைச்சு ஒன்னா சேர்த்துப்புட்டா
பூமி செழிச்சதுன்னா பொன்ன அள்ளி கொடுப்பதுபோல்
பொன்னப்போல் சிரிச்சு அவ பார்த்துப்புட்டா
என்னம்மா ஆராய்ச்சி பொன்னு இப்ப பூவாச்சு
அம்மன் கோவில் தேராச்சு ஆடி வரும் நாளாச்சு
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா

பாடலை கேட்டு மகிழுங்கள்